(1920)

(1920)

தம்பர மல்லன் ஆண்மைக ளைத்தனி யேநின்று தாம்செய் வாரோ?

எம்பெரு மான் உன்னைப் பெற்ற வயிறுடை யேனினி யானென் செய்கேன்?

அம்பர மேழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்க ணுடை

வம்பவிழ் கானத்து மால்விடை யோடு பிணங்கிநீ வந்தாய் போலும்.


பதவுரை

எம் பெருமான்

என்னுடைய கண்ணபிரானே!

தம் பரம் அல்லன ஆண்மைகளை

தம் பருவத்திளைவல்லாத பௌருஷங்களை

தனியே நின்று செய்வரோ தாம்

தனிமையா யிருந்து செய்யத் தகுமோ?

உன்னை பெற்ற வயிறு உடையேன்

(தனியே அதிமாநுஷ காரியங்களைச் செய்கிற) உன்னைப் பெறும்படியான வயிறு படைத்தவளானேன்,

யான் இனி என் செய்கேன்

உன்னைப் பெற்ற பின்பு நான் என்ன செய்யவல்லேன்?

வம்பு அவிழ்கானத்து அங்கு

பரிமளம் வீசுகின்ற அச்சோலையிடத்திலே

அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல்

மேலுலகங்களெல்லாம் அதிரும்படியான கனத்த குரலையும்

அனல் செம் கண் உடை

நெருப்புப்போலே சிவந்த கண்களையு முடையனவான

மால் விடையோடு

கரிய எருதுகளோடே

நீ பிணங்கி வந்தாய் போலும்

நீ போர் செய்து வந்தாயாமே

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணனுடைய தீம்புகளைச்சொல்லி முறையிடுகினற ஆய்ச்சிகளை ஒருவாறு த்ருப்தி செய்விக்க முன்னடிகள் அமைந்தன. உன்னுடைய பருவத்துக்கும் சக்திக்கும் ஈடல்லாத காரியத்தை நீ செய்வதே பிசகு, அதிலும் பலராமனோடு கூடவிருந்து செய்தாலாவது கண்ணெச்சில் படாதிருக்கும், அஸஹாயனாய் நின்று செய்யத் தகுமோ? இனிச் சொல்லி என்? இப்படிப்பட்ட உன்னை இந்த வயிற்றில் சுமந்து பெற்றவிட்டேன், இனி நான் என்ன செய்யக்கூடுமென்கிறான்.

தம்பரமல்லன -என்னும் வடசொல் பரமெனத் திரிந்தது. தன்னால் தாங்கமுடியாதவற்றை என்றபடி. ஆண்மைகள் -ஆண் புலி யென்பதைக் காட்டக்கூடிய வீரச்செயல்கள். அம்வரம் – வடசொல்.

 

English Translation

O My sweet Lord! What is beyond person;s ability must be done others help. why should you do it alone? Alas, I bore you in my womb, now what can I do? The dark bulls with red eyes and fiery shorts send bellows that shake the seven worlds! It looks like you went into the fragrant grove and fought with them victoriously!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top