(1914)
ஆயிரம் கண்ணுடை இந்திர னாருக்கென் றாயர் விழவெ டுப்ப,
பாசனம் நல்லன பண்டிக ளால்புகப் பெய்த அதனை யெல்லாம்,
போயிருந் தங்கொரு பூத வடிவுகொண் டுன்மக னின்று நங்காய்,
மாயன் அதனையெல் லாம்முற்ற வாரி வளைத்துண் டிருந்தான் போலும்.
பதவுரை
| நங்காய் |
– |
அசோதாய்! |
| ஆயர் |
– |
இடையர்கள் |
| ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கென்று |
– |
ஸஹஸ்ராக்ஷனான தேவேந்திரனுக்காக |
| விழவு எடுப்ப |
– |
ஆராதனை செய்வதற்கு |
| நல்லன பாசனம் |
– |
நல்ல பாத்திரங்களிலே |
| பண்டிகளால் |
– |
(பலபல) வண்டிகளாலே |
| புகப்பெய்த அதனை எல்லாம் |
– |
கொண்டுவந்து தள்ளப்பட்ட அந்த அன்னராசியை யடங்கலும் |
| இன்று |
– |
இன்றையதினம் |
| அங்கு |
– |
அவ்விடத்தில் |
| மாயன் உன் மகன் |
– |
மாயச்செய்கை வல்லவனான உன்பிள்ளை |
| போய் இருந்து |
– |
போயிருந்து |
| ஒரு பூதம் வடிவு கொண்டு |
– |
ஒரு பூதத்தின் வடிவைப் பூண்டு |
| அதனை எல்லாம் முற்ற |
– |
அவை முழுவதையும் |
| வளைத்து வாரி |
– |
(கைகளால்) வாரித்திரட்டி |
| உண்டிருந் தாண்டோலும் |
– |
உட்கொண்டானானாயிற்று |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாட்டில் ‘அதனை யெல்லாம்’ என்பது இரண்டாமடியிலும் ஈற்றடியிலுமாக இரண்டு முறை பிரயோகிக்கப்பட்டுள்ளது, * அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிரவாவியும் நெய்யளறுமாகத் திரட்டின திரளிலே ஒரு சிறு அவிழும் மிச்சமாகாதபடி அடங்கலும் துற்றினானென்பதைக் காட்டுதற்கேயாயிற்று இவ்விரட்டிப்பு.
English Translation
O Lady Yasoda! From the days of yore, the cowherd talk celebrate a festival for the thousand-eyed indra bringing cartloads of good food-offering to the hill, If seems your wonderful son went there today and, assuming a ghoul form, gobbled up all of it in one sweep!
