(1878)

(1878)

சந்த மலர்க்குழல் தாழத் தானுகந் தோடித் தனியே

வந்து,என் முலைத்தடந் தன்னை வாங்கிநின் வாயில் மடுத்து,

நந்தன் பெறப்பெற்ற நம்பீ. நானுகந் துண்ணும் அமுதே,

எந்தை பெருமனே உண்ணாய் என்னம்மம் சேமமுண் ணாயே,

 

பதவுரை

நந்தன்

நந்தகோபர்

பெற்ப்பெற்ற

பிள்ளையாகப் பெறும்படி வாய்ந்த

நம்பீ

ஸ்வாமியே!

நான் உகந்து உண்ணும் அமுதே

நான் பரிவுடனே புஜிக்கின்ற அமுதமாயிருப்பவனே!

எந்தை பெருமானே

என்குல நாதனான கண்ணபிரானே!

சந்தம் மலர் குழல்

செவ்விப் பூக்களை யணிந்த திருக்குழற்கற்றையானது

தாழ

அலைய

தான் தனியே உகந்து ஓடி வந்து

நீ (பலராமனைவிட்டுத்) தனியே மகிழ்ச்சியுடன் (என் பக்கல்) ஓடிவந்து

என் முலைத்தடம் தன்னை வாங்கி

எனது முலைகளைக்கையிற்பிடித்து

நின் வாயில் மடுத்து

உனது வாயிலே நிறைத்துக் கொண்டு

உண்ணாய்

உண்ணவேணும்,

என் அம்மம்

என்னுடைய முலைப்பாலாகிற

சேமம்

க்ஷேமத்தளிகையை

உண்ணாய்

உண்ணவேணும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரானே! குழலலைய அலைய ஓடிவந்து என்முறைகளை உன்வாயில் மடுத்துப் பாலுண்ணவேணுமென்று அழைக்கிறாள். ‘சந்தமலர்க்குழல்’ என்றதனால் “செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி, அழகிய மலர்களை குழலிலே சூட்டியிருக்கின்றாளென்பது உணரத்தக்கது. குழல்தாழ வர வேணுமென்றது -முலையுண்பதிலுண்டான பேராவல் விளங்குமாறு தன்னைப் பேணாதே ஓடிவரவேணுமென்றபடி. * தன்னோராயிரம் பிள்ளைகளோடு இவன் விளையாடுகிறானாகையாலே அவர்களையும் பலராமனையும் விட்டத் தனியே வர வேணுமென்றழைக்கிறாள். (முலைத்தடந்தன்னை வாங்கி நின்வாயில் மடுத்து) யசோதைப்பிராட்டிக்கு இப்படியும் ஒரு ஆசை போலும், தன்கையாலே முலையை யெடுத்துக்கண்ணபிரானது திருப்பவளத்திலே தான் மடுப்பதிலுங்காட்டில் அவன் தானே பிடித்து வாயில் மடுத்து உண்ணப்பெறில் அதிலே ஒரு போக்ய தாதியம் கண்டவள்போலும்.

(நந்தன்பெறப்பெற்ற நம்பீ!) ‘நந்தன் பெற்ற நம்பீ!’ என்றால் போராதோ? ‘பெறப் பெற்ற’ என்பானேன்? என்னில், ஈச்வரனுக்கு இது அலப்யலாபம் என்பது தோற்றுதற்காகவே இப்படி அருளிச்செய்த்தென்ப நந்தகோபன் பிள்ளையாகப் பெறும்படியான பாக்கியம் பெற்றிவனே! என்றவாறு. இவனுடைய பிறப்பினால் நந்தகோபனுக்கு ஏற்றம், நந்த கோபனுக்குப்பிள்ளையாகப் பிறந்த்தனால் இவனுக்கு ஏற்றம் என்றிறே நம் ஆசார்யர்கள் நிர்வஹிக்கிறபடி.

 

English Translation

O Lord born to Nandagopa, my sweet ambrosial My Master! with your beautiful flower-tresses hanging low, come running here alone and take my swollen breasts. Place your auspicious lips on it and take suck! Take suck!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top