(1875)

(1875)

கவள யானை பாய்புர வித்தே ரோட ரக்கரெல்லாம்

துவள, வென்ற வென்றி யாளன் றன்தமர் கொல்லாமே

தவள மாடம் நீட யோத்தி காவலன் றன்சிறுவன்

குவளை வண்ணன் காண ஆடீர் குழமணி தூரமே.

 

பதவுரை

கவளம் யானை

கவளங்கொள்ளுமியல் பினவான யானைகளும்

பாய் புரவி

பாய்ந்து வருகிற குதிரைகளும்

தேரோடு

தேர்களும் ஆகிய இவையெல்லாவற்றொடுங்கூட

அரக்கர் எல்லாம் துவள

ராக்ஷஸஜாதியடங்கலும் கஷ்டப்படும்படியாக

வென்ற

ஜயித்த

வென்றியாளன் தன் தமர்

ஜயசீலரான பெருமாளுடைய கிங்கரர்களான வானரவீரர்கள்

கொல்லாமே

(நம்மை) கொல்லாதபடி,

தவளம் மாடம் நீடு

வெண்மையான மாடமாளிகை களினால் நீண்டிருக்கிற

அயோத்தி

அயோத்திமா நகர்க்கு

காவலன் தன்

அரசரான தசரதருடைய

சிறுவன்

திருக்குமார்ராய்

குவளை வண்ணன்

குவளை மலர்போன்ற நிறத்தையுடையரான இராமபிரான்

காண

காணும்படியாக

குழமணிதூரம்

குழமணிதூரக்கூத்து

ஆடீர்

ஆடுங்கோள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டும் கீழ்ப்பாட்டுப்போலவே அரக்கருள்ளாரை யழைப்பதாம். ‘அரக்கருள்ளீர்!’ என்ற விளி கீழ்ப்பாட்டிலிருந்து வருவித்துக் கொள்ளத்தக்கது. யானைகளும் குதிரைகளும் தேர்களுமாகிய சேனையுறுப்புகளெல்லா வற்றோடுங்கூட அரக்கர் தொலையுமாறு கொன்று வெற்றி பெற்ற ஆண்புலியின் கிங்கரர்களான அந்த சக்ரவர்த்தி திருமகன் கண்டுமகிழும்படியாகக் குழமணிதூரமாட எங்களோடே வந்து கூடுங்கள் என்கிறார்கள்.

 

English Translation

The victorious blue-lotus-hued Lord is the price of white-mansioned Ayodhya. His monkey army, overran our Lanka destroying the battle elephants, impetuous horses, tall chariots and our crowned kings. Lest they kill us, dance for them the kulamani Duram

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top