(1824)
தேனுகன் ஆவி போயுக அங்கோர் செழுந்திரள் பனங்கனி யுதிர தானுகந்
தெறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,
வானகச் சோலை மரகதச் சாயல் மாமணிக் கல்லதர் நிறைந்து,
மானுகர் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
பதவுரை
|
மடநெஞ்சே!- |
||
|
தேனுகன் |
– |
தேநுகாஸுரனுடைய |
|
ஆவி |
– |
பிராணன் |
|
போய் உக |
– |
தொலைந்து போவதற்காக |
|
அங்கு |
– |
அவ்விடத்தில் |
|
ஓர் செழு திரள் பனங்களி உதிர |
– |
அழகாக்த் திரண்டிருந்த பனம்பழங்கள் உதிரும்படியாக |
|
தான் எறிந்து உகந்த |
– |
அக்கழுதையைப் பனங்கனிமேலெறிந்து திருவுள்ளமுவந்த |
|
தட கடல் வண்ணர் |
– |
கம்பீரமான கடல்போன்ற வடிவையுடையரான பெருமாள் |
|
முன் |
– |
முன்பு |
|
எண்ணி |
– |
இதுவே பாங்கான இடமென்று திருவுள்ளம்பற்றி |
|
இடம் கொண்ட |
– |
இருப்பிடமாக ஸ்வீகரித்த கோயில் |
|
மான் |
– |
மான்களானவை, |
|
மரதகம் சாயல் |
– |
மரதகமணிபோன்ற ஒளியையுடையவையாய் |
|
வானகம் |
– |
ஆகாசத்தளவும் ஓங்கினவைகளான |
|
சோலை |
– |
சோலைகளிலிருக்கிற |
|
மா மணிக்கல் அதர் |
– |
நீலப்பாறை வழிகளில் (புகுந்து) |
|
நிறைந்து |
– |
நிறைய இருந்து |
|
நுகர் |
– |
மேயப்பெற்ற |
|
சாரல் |
– |
பக்கங்களையுடைத்தான |
|
மாலிருஞ்சோலை, வணங்குதும் வா |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மரதகப் பச்சையின் நிறங்கொண்டு ஆகாசப் பரப்புடைய ஓங்கி யிருந்துள்ள சேலையினுள்ளில் நீலப்பாளை வழியே போய்ப்புக்கு மான்கள் தேனைப்பருகா நின்றுள்ளதாம் இத்திருமலை.
அதர் – வழி.
English Translation
O Frail Heart! The ocean-hued Lord came then as krishna, threw the Asura Dhenuka against a Palm tree, killin him instantly, Long ago he decided to reside in Malirumsolai, where deer frolic in the blue-gem mountain paths amid emerald-green forests. Come, let us offer worship there
