(1817)
மறைவலார் குறைவிலார் உறையுமூர் வல்லவாழடிகள் தம்மை,
சிறைகுலா வண்டறை சோலைசூழ் கோலநீள் ஆலி நாடன்
கறையுலா வேல்வல்ல கலியன்வாய் ஒலியிவை கற்று வல்லார்
இறைவராய் இருநிலம் காவல்பூண் டின்பநன் கெய்து வாரே.
பதவுரை
|
மறை வலார் |
– |
வேதமல்லவர்கள் |
|
குறைவு இலார் |
– |
குறைவொன்றுமில்லாதவர்களாய்க் கொண்டு |
|
உறையும் ஊர் |
– |
நித்யவாஸம்பண்ணுமிட மான |
|
வல்லவாழ் |
– |
திருவல்லவாழில் எழுந்தருளியிருக்கிற |
|
அடிகள் தம்மை |
– |
ஸ்வாமிவிஷயமாக |
|
சிறைகுலாவண்டு அறைசோலை சூழ் |
– |
சிறகையும் கொண்டாட்டத்தையுமுடைய வண்டுகள் ரீங்காரஞ் செய்யப்பெற்ற சோலைகளால் சூழப்பட்ட |
|
கோலம் |
– |
அழகிய |
|
நீள் |
– |
பெரிய |
|
ஆலி நாடன் |
– |
திருவாலிநாட்டுக்குத் தலைவரும் |
|
கறை உலாம் |
– |
ரத்தக்களைகழுவாத |
|
வேல் வல்ல |
– |
வேற்படையை யுடையருமான |
|
சலியன் |
– |
திருமங்கையாழ்வார் |
|
வாய் ஒலி |
– |
திருவாயமலர்ந்த |
|
இவை |
– |
இப்பத்துப் பாசுரங்களை |
|
கற்று வல்லார் |
– |
ஓதியுணரவல்லவர்கள் |
|
இறைவர் ஆய் |
– |
அரசர்களாயிருந்துகொண்டு |
|
இரு நிலம் |
– |
விசாலமான இந்நிலத்தை |
|
காவல் பூண்டு |
– |
ஆண்டு கொண்டு |
|
நன்கு இன்பம் எய்துவரார் |
– |
பரமாநந்தமடையப்பெறுவர் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வேதம் வல்ல அந்தணர்கள் ஒரு குறையுமின்றி * நித்யஸ்ரீர்நித்ய மங்களமாக வாழுமிடமான திருவல்லவாழென்னும் மலைநாட்டுத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கு மெம்பெருமான் விஷயமாகத் திருமங்யாழ்வார்ருளிச் செய்த இத்திருமொழியை ஓதி உணருமவர்கள் இவ்விபூதியிலுள்ளவரையில் தாங்களே தலைவராயிருந்து, இவ்வுடல் நீத்தபின் நித்யவிபூதியிலே புக்கு நித்யாநந்தம் பெறுவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.
வலார் – வல்லார். இலார் – இல்லார்.
கறையுலாவேல் – ஒய்வின்றி சத்ருநிரஸநம் பண்ணவேண்டுகையாலே ரக்தக்கறை கழுவ்வும் அவகாசமற்ற வேற்படை யென்க.
English Translation
This is a garland of songs on the Lord of Tiruvallaval worshipped by the perfect Vedic seers, by the sharp-spear-wielding Kaliyan, king of Alinadu surrounded by beautiful bee-humming graves. Those who master it will rule as kings on Earth and rejoice in heaven
