(1815)
மஞ்சுசேர் வானெரி நீர்நிலம் காலிவை மயங்கி நின்ற
அஞ்சு சேராக் கையை அரணமன் றென்றுய்யக் கருதி னாயேல்,
சந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்துசேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
பதவுரை
|
நெஞ்சே |
||
|
மஞ்சு சேர் வான் |
– |
மேகங்கள் சேர்ந்த ஆகாசம் |
|
எரி |
– |
அக்நி |
|
நீர் |
– |
ஜலம் |
|
நிலம் |
– |
பூமி |
|
கால் |
– |
காற்று ஆகிய |
|
இவை |
– |
இப்பஞ்சபூதங்களும் |
|
மயங்கி நின்ற |
– |
கூடிவர்த்திக்கிற |
|
அஞ்சு சேர் ஆக்கையை |
– |
பாஞ்ச பௌதிகமான சரீரத்தை |
|
அரணம் அன்று என்று |
– |
ரக்ஷகமல்லவென்று கொண்டு |
|
உய்ய |
– |
உஜ்ஜீவித்துப் போக |
|
கருதினால் ஏல் |
– |
நினைத்தாயாகில் |
|
சந்து சேர் |
– |
சந்தனமணிந்த |
|
மெல் முலை |
– |
மெல்லிய முலைகளையுடைய |
|
பொஷ் மலர் பாவையும் தாமும் |
– |
பெரிய பிராட்டியாரும் தாமுமாக |
|
நாளும் |
– |
எப்போதும் |
|
வந்து சேர |
– |
கூடிவாழுமிடமான |
|
வல்லவாழ் *** மருவு |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘சந்தநம்’ என்னும் வடசொல் ‘சந்து’ எனச் சிதைந்து நின்றது.
English Translation
O Heart! This body is a fusion of the five elements, earth, fire, water, air and space. If you realise that this is no fortress and seek a way out, then learn to speak of the glories of Tiruvallaval, abode of the Lord who resides with the Sandal-corsetted lotus-dame Lakshmi
