(1700)

(1700)

வல்லி யிடையாள் பொருட்டாக மதிள்நீ ரிலங்கை யார்கோவை,

அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுந்த ஆற்றலான்,

வல்லாள் அரக்கர் குலப்பாவை வாட முனிதன் வேள்வியை,

கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.

 

பதவுரை

வல்லி இடையாள் பொருட்டாக

கொடிபோல் மெல்லிய இடையை யுடையளான ஸீதைக்காக,

நீர்

கடலை அகழாகவுடையதாய்

மதிள்

மதிள்களையுமுடைத்தான

இலங்கையர்

லங்காபுரியிலுள்ள அரக்கர்களுக்கு

கோவை

தலைவனான இராவணனை

அல்லல் செய்து

துன்பப்படுத்தி

வெம் சமத்துள்

வெவ்விய போர்க்களத்திலே

ஆற்றல் மிகுந்த

தன்னுடைய மிடுக்கை மிகவும் விளங்கக்காட்டின

ஆற்றலான்

மஹா வீரனும்

வல் ஆள் அரக்கர்

வலிய ஆண்மைத்தனமுடைய ராக்ஷஸர்களின்

குலம்

குலத்தில் தோன்றிய

பாவை

தாடகை யென்னும் அரக்கியை

வாட

முடிய (ச் செய்து)

முனி தன்

விச்வாமித்ர முனியினுடைய

வேள்வியை

யாகத்தை

கல்வி சிலையால்

தான் கற்றுப் பயின்ற வில்லைக் கொண்டு

காத்தான்

காத்தருளினவனுமான பெருமானுடைய

ஊர், கண்ணபுரம், நாம் தொழுதும்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கல்விச்சிலையால் காத்தான் = ஸீதா விவாஹத்திற்குப் பிறகு  பரசுராமனை வென்று கைப்பற்றிக்கொண்ட தன்னதான வில்லினால் விச்வாமித்ர யாகத்தைக் காத்தானல்லன்; பயிற்சிக்குப் பிடித்ததொரு வில்லைக்கொண்டு காத்தானத்தனை.

 

English Translation

For the sake of the creeper-like tender waisted Lady Sitamma; He did wield a bow and burn the city of Lakna with arrow to dust He did stand guard over sage’s Viswamitra sacrifice! He destroyed Rakshasi Tataka; -kannapuram, O, let us worship!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top