(1699)
பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற அன்று புள்ளூர்ந்து,
பெருந்தோள் மாலி தலைபுரளப் பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை,
இருந்தார் தம்மை யுடன்கொண்டங் கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப,
கருந்தாள் சிலைகைக் கொண்டானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
பதவுரை
|
அன்று |
– |
முன்பொருகாலத்தில், |
|
வெம் சமத்து |
– |
கொடிய போர்க்களத்திலே |
|
பொருத்தா அரக்கர் |
– |
சத்ருக்களான ராக்ஷஸர்கள் |
|
பொன்ற |
– |
முடியும்படியாக |
|
புள் ஊர்ந்து |
– |
கருடப் பறவையை ஏறி நடத்திக் கொண்டெழுந்தருளி |
|
பெரு தோள் மாலி |
– |
வலிய தோள்களையுடையனான மாலியினுடைய |
|
தலை |
– |
தலையானது |
|
புரள |
– |
(அற்று விழுந்து நிலத்தில்) புரளும் படியாகவும் |
|
பேர்ந்த அரக்கர் |
– |
அவனைத் தவிர மற்ற ராக்ஷஸர்கள் |
|
தென் இலங்கை இருந்தார் தம்மை உடன் கொண்டு |
– |
தென்னிலங்கையிலிருந்து மற்றுமுள்ள ராக்ஷஸர்களையுங் கூட்டிக்கொண்டு |
|
அங்கு |
– |
அவ்விடத்திலிருந்து |
|
எழில் ஆர்பிலத்து |
– |
அழகிய பாதாளத்திலே |
|
புக்கு ஒளிப்ப |
– |
புகுந்து மறையும்படியாகவும் |
|
கருந் தாள் சிலை |
– |
வயிரம்பற்றித் திண்ணிதான வில்லை |
|
கை கொண்டான் |
– |
திருக்கையிலே தரித்தவனான எம்பெருமானுடைய |
|
ஊர் |
– |
இருப்பிடமான |
|
கண்ணபுரம், நாம் தொழுதும்-. |
||
English Translation
In the war with the Rakshasa clans he rode mighty Garuda bird, Rolled the heads of mighty Mali and a host of other ferrible ones, Entered ocean-girdled Lanka-city of beauty with a terrible bow, killed the mighty Ravana; now is in kannapuram, O, let us worship!
