(1697)
வார்கொள் மென்முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,
ஆர்வத் தாலவர் புலம்பிய புலம்பலை அறிந்துமுன் உரைசெய்த,
கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி யொலிவல்லார்,
ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு இமையவரொடும் கூடுவரே.
பதவுரை
|
வார் கொள் |
– |
கச்சு அணிந்த |
|
மென் முலை |
– |
மெல்லிய முலைகளையடைய |
|
மடந்தையர் அவர் |
– |
(திருவாய்ப்பாடியிலுள்ள) அப்பெண்கள் |
|
தட கடல் வண்ணன் |
– |
பெரிய கடலின் நிறம் போன்ற நிற முடையனான கண்ணபிரானுடைய |
|
தாளை |
– |
திருவடிகளை |
|
நயந்து |
– |
ஆசைப்பட்டு |
|
ஆர்வத்தால் |
– |
அன்பினால் |
|
முன் புலம்பிய புலம்பலை |
– |
முன்பு கதறின கதறலை |
|
அறிந்து |
– |
உட்கொண்டு, |
|
கார் கொள் பை பொழில் மங்கையர் காவலன் |
– |
மேக ஸஞ்சாரத்தையுடைய பரந்தசோலைகளையுடைத்தான திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான |
|
கலிகன்றி |
– |
ஆழ்வார் |
|
உரைசெய்த |
– |
அருளிச் செய்த |
|
ஒலி |
– |
இச்சொற்களை |
|
வல்லார் |
– |
ஓதியுரணவல்லவர்கள் |
|
ஏர்கொள் |
– |
அழகிய |
|
வைகுந்தம் மா நகர் |
– |
பரமபதமென்னுந் திருநாட்டிலே |
|
புக்கு |
– |
புகுந்து |
|
இமையவரோடும் |
– |
நித்யஸுரிகளோடே |
|
கூடுவர் |
– |
சேரப்பெறுவர்கள். |
English Translation
This garland of sweet Tamil Songs by monsoon covered-graves-Mangai king kalikanri recalls the lament of a coiffured dome desirous of the ocean-hued Lord’s feet. Those who master it will enter the beautiful vaikunta and live with the celestials.
