(1646)
பண்ணி னைப்பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுரு வாய்நின்ற
விண்ணி னை,விளங் கும்சுடர்ச் சோதியை வேள்வி யைவிளக் கினொளி தன்னை,
மண்ணி னைமலை யையலை நீரினை மாலை மாமதி யைமறை யோர்தங்கள்
கண்ணி னை,கண்க ளாரள வும்நின்று கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
பதவுரை
|
பண்ணினை |
– |
ஸங்கீதம் போல் இனியனானவனும் |
|
பண்ணில் நின்றது ஓர் பான்மையை |
– |
அந்த சங்கீதத்தின் ஸாரமான தன்மைபோன்ற தன்மையை யுடையவனும் |
|
பாலுள் நெய்யினை |
– |
பாலினுள்ளே நெய் மறைந்திருப்பது போல எங்கும் மறைந்துறைகின்றவனும் |
|
மால் உரு ஆய் நின்ற விண்ணினை |
– |
மிக்க பரப்பையுடைத்தான நித்ய விபூதிக்கு நாதனும் |
|
விளங்கும் சுடர் சோதியை |
– |
விளங்குகின்ற பரஞ்சோதிமயமான திருமேனியையுடையவனும் |
|
வேள்வியை |
– |
யாகஸ்வரூபியும் |
|
விளக்கின் ஒளி தன்னை |
– |
விளக்கொளிபோலே ஸ்வயம் ப்ரகாசனும் |
|
மண்ணினை |
– |
பூமிபோலே எல்லாவற்றையும் பொறுத்திருப்பவனும் |
|
மலையை |
– |
மலைபோல் ஒருவராலும் அசைக்க வொண்ணாதவனும் |
|
அலை நீரினை |
– |
தண்ணீர்போலே வேண்டுமிடங்களுக்கு வருவித்துக்கொள்ளவுரியவனும் |
|
மாலை |
– |
அடியவரிடத்து வியாமோஹம் கொண்டிருப்பவனும் |
|
மா மதியை |
– |
சிறந்த புத்தியை யளிப்பவனும் |
|
மறையோர்தங்கள் கண்ணினை |
– |
வைதிகர்களுக்குக் கண் போன்றிருப்பவனுமான பெருமானை |
|
கண்கள் ஆரளவும் நின்று |
– |
கண்கள் த்ருப்தி பெறுமளவும் நின்று |
|
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***-???? ???? ???????? பசுர் வேத்தி சிசுர் வேத்தி வேத்தி காநரஸம் பணீ” (ஸங்கீதத்தின் இனிமைளை நாற்கால் விலங்கு அறியும், குழந்தை அறியும், பாம்பு அறியும்) என்கிறபடியே பண் அனைவர்க்கும் ஸ்ப்ருஹணீயமாயிருப்பது போல எம்பெருமானும் விரும்பத்தக்கவன் என்றபடி. (பண்ணில் நின்றதோர் பான்மையை) ‘பண்ணினை’ என்று கீழ்ச் சொன்னதன் கருத்தே இதற்குமாயினும் எம்பெருமானுடைய போக்யதையைப் பன்னியுரைக்கின்றபடி. இதில் புநருக்திதோஷம் புகாது.
(பாலுள் நெய்யினை.) 1. “கறந்த பாலுள் நெய்யேபோல் இவற்றுளெங்கும்” என்கிறபடியே பாலினுள்ளே உறைந்திருக்கும் நெய்போலே கரந்த சிலிடந்தொறுமிடந்திகழ் பொருடொறுங் கரந்தெங்கும் பரந்துளன் என்கை. (மாலுருவாய் நின்ற விண்ணினை.) நித்ய விபூதி நிர்வாஹகனாயிருக்குமவனென்கை. ‘மாலுருவாய் நின்ற’ என்றது விண்ணுக்கு விசேஷணம்; பரமபதமானது த்ரிபாத்விபூதி யென்னப்படும்; என்கிற புருஷஸூக்தத்தின்படியே இந்த விபூதியில் எல்லா பூதங்களும் இவனுக்கு நாலத்தொன்று என்னும்படி அறபமாயிருக்கும்; பரமாகாசத்தில் அவனுடைய நித்யமான விபூதி த்ரிபாத் என்னும்படி மும்மடங்காயிருக்கும்; ஆக இந்தப் பரப்பைத் தெரிவிக்கும் இவ்விசேஷணம். (விளங்கும் சுடர்ச் சோதியை.) அங்கே அளவற்ற தேஜோ ரூபமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனாய் நிற்பவன். (வேள்வியை.) யஜ்ஞஸ்வரூபி; ஸகல கருமங்களாலும் ஆராதிக்கப்படுமவ னென்றவாறு. (விளக்கினொளிதன்னை.) விளக்கொளியானது தன்னைத்தானே பிரகாசிப்பித்துக் கொண்டு பிறவற்றையும் பிரகாசம் படுத்துமா போலே ஸ்வபர ப்ரகாசகன்.
(மண்ணினை.) பூமியானது ‘ஸர்வம்ஸஹா’ என்ற பெயர்க்கு ஏற்ப எல்லாவற்றையும் பொறுத்திருப்பது போல, செய்தார் செய்த குற்றங்களை யெல்லாம் பொறுப்பவனென்கை.
(மலையை.) இப்படிப்பட்ட தன் ஸ்வபாவம் ஒருவரால் சலிப்பிக்கவொண்ணாமே உறுதிகொண்டிருப்பவ னென்கை. (அலைநீரினை.) பள்ளமான விடங்களிலே பாயுமே தண்ணீர்; குஹப்பெருமாள், விதுரர், மாலாகாரர் போல்வாரிடத்தும் பாயுந்தண்ணீர் எம்பெருமான். (மால்.) இன்பரிடத்தில் வ்யாமோஹமே வடிவாயிருப்பவன்.
(மாமதியை.) ?????????????????????, ததாமி புத்தி யோகம தம் யேந மாமுபயாந்தி தே” என்று கீதையில் தானே சோதிவாய்திறந் தருளிச் செய்தபடியே, தன்னைப் பெறுதற் குறுப்பான சிறந்த புத்தியைத் தந்தருள்பவனென்கை; மதி – புத்தி; வடசொல். (மறையோர் தங்கள் கண்ணினை.) வைதிகர்களுடைய கண் வேறெங்கும் பட்டி புகாமல் தன்னையே இலக்காகக் கொண்டிருக்கும்படி எப்போதும் அவர்களது கண்ணைவிட்டுப் பிரியாதவனென்றவாறு. இப்படிப்பட்ட பெருமானைக் கண்ணாரக்கண்டு கொண்டேன் கண்ணமங்கையி லென்கிறார்.
English Translation
The sweet Pann, the sweetness of Pann, the Ghee in milk, the adorable form in Vaikunta, the radiant form, the sacrifice, the light of the lamp, the Earth, the mountains, the deep waters, the rising Moon, dear as eyes to Vedic seers, -formy fill, I sought and found him Kannamangai.
