(1519)

(1519)

முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்தநாள்

அந்நீரை மீனா யமைத்த பெருமானை

தென்னாலி மேய திருமாலை யெம்மானை

நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டேனே.

 

பதவுரை

முன்நாள்

முன்பொருகாலத்தில்

முந்நீரை

ஸமுத்ரத்தை

கடைந்தானை

கடைந்தவனும்

மூழ்ந்த நாள்

(உலகத்தைப்) பிரளயங்கொண்ட காலத்தில்

மீன் ஆய்

மத்ஸ்ரூபியாகி

அந்நீரை

அந்தப் பிரளயக்கடல் நீரை

அமைத்த

அடக்கின

பெருமானை

பெருமை பொருந்தியவனும்

தென் ஆலி

அழகிய திருவாலிமா நகரில்

மேய

நி்த்யவாஸம் பண்ணுநின்ற

திருமாலை

திருமகள் நாதனுமான

எம்மானை

எம்பெருமானை

நல் நீர் வயல் சூழ்

நல்ல நீர்பாயும் கழனிகளாற் சூழப்பட்ட

நறையூரில், கண்டேன்-.

 

English Translation

The Lord in the yore churned the ocean, came in the form of fish and drank it during the deluge.  He is the Lord Tirumal of Ten-Vayalali, my master.  Amid fetile fields and groves, I have found him in Naraiyur.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top