(1519)
முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்தநாள்
அந்நீரை மீனா யமைத்த பெருமானை
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டேனே.
பதவுரை
|
முன்நாள் |
– |
முன்பொருகாலத்தில் |
|
முந்நீரை |
– |
ஸமுத்ரத்தை |
|
கடைந்தானை |
– |
கடைந்தவனும் |
|
மூழ்ந்த நாள் |
– |
(உலகத்தைப்) பிரளயங்கொண்ட காலத்தில் |
|
மீன் ஆய் |
– |
மத்ஸ்ரூபியாகி |
|
அந்நீரை |
– |
அந்தப் பிரளயக்கடல் நீரை |
|
அமைத்த |
– |
அடக்கின |
|
பெருமானை |
– |
பெருமை பொருந்தியவனும் |
|
தென் ஆலி |
– |
அழகிய திருவாலிமா நகரில் |
|
மேய |
– |
நி்த்யவாஸம் பண்ணுநின்ற |
|
திருமாலை |
– |
திருமகள் நாதனுமான |
|
எம்மானை |
– |
எம்பெருமானை |
|
நல் நீர் வயல் சூழ் |
– |
நல்ல நீர்பாயும் கழனிகளாற் சூழப்பட்ட |
|
நறையூரில், கண்டேன்-. |
||
English Translation
The Lord in the yore churned the ocean, came in the form of fish and drank it during the deluge. He is the Lord Tirumal of Ten-Vayalali, my master. Amid fetile fields and groves, I have found him in Naraiyur.
