(1503)

(1503)

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய்,

தன்னாலே தானுருவில் மூர்த்தி மூன்றாய்த் தானாய னாயினான் சரணென்றுய்வீர்

மின்னாடு வேலேந்து விளைந்த வேளை விண்ணேறத் தனிவேலுய்த் துலகமாண்ட

தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


பதவுரை

தன்னாலே

ஸ்வேச்கையாலே

தன் உருவம்

தனது திவ்யமங்கள விக்ரஹத்தை

பயந்த

உண்நுபண்ணிக்கொண்ட

தான் ஆய்

திவ்யாத்மஸ்வரூபத்தையுடையனாய்

நயங்கு ஒளி சேர் மூஉலகும் தான் ஆய்

மிக்க வொளியையுடைய மூவுலங்களையும் தான் என்கிறசொல்லுக்குள்ளே அடக்கிக் கொண்டவனாய்

வான் ஆய்

பரமபதத்துக்குத் தலைவனாய்

தன்னாலே

தன்னுடைய ஸங்கல்பத்தாலே

தன் உருவில்

தன்ஸ்வரூபத்தில் நின்றும்

மூன்று மூர்த்தி ஆய்

மூன்று மூர்த்திகள வெளியிட்டவனாய்

தான்

தானே

ஆயன் ஆயினான்

கோபாலக்ருஷ்ணனமாகத் திருவவதரித்தவனான எம்பெருமான்

சரண் என்று உய்வீர்

சரணம் என்றெண்ணி உஜ்ஜீவிக்க நினைப்பவர்களே!.

மின் ஆடு

ஒளி பொருந்திய

வேல் ஏந்து

வேற்படையைத்தரித்த

விளந்தை வேளை

‘விளந்தைவேள்’ என்னுமோரரசனை

விண் ஏற

வீரஸ்வர்க்கமடையும்படி

தனி வேல் உய்த்து

ஒப்பற்ற வேற்படையைப் பிரயோகித்து

உலகம் ஆண்ட

உலகங்களை ஆண்டு வந்த

தென் நாடன்

தென்தேசத்தரசனாய்

குடகொங்கன்

மேற்றிசையிலுள்ள கொங்கு நாட்டுக்குத் தலைவனான

சோழன், சேர்ந்த திருநறையூர் மணிமாடம்

சோமின்கள்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தன்னுருவம் தன்னாலே பயந்த தானாய் எம்பெருமான் தவிர மற்றையோருடைய ஸ்வரூபமெல்லாம் எம்பெருமானுயை இச்சைக்கு உட்பட்டதாயிருப்பதுபோல, எம்பெருமானுடைய ஸ்வரூபஸ்வபாவங்கள் வேறொருவருடைய இச்சைக்கு உட்பட்டதாயிருக்குமோ வென்னில், இரா; தன்னுடைய ஸ்வரூபஸ்திதி முதலியவை தானிட்ட வழக்காம்படியிருக்கும் அவனென்னவுமாம்; அகர்மவச்யன் என்றவாறு.  “தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்” என்றதனால் நித்யவிபூதியைத் தானிட்ட வழக்காகவுடையன் என்பதும், ‘வானாய்‘ என்றதனால் நித்யவிபூதியைத் தானிட்ட வழக்காகவுடையன் என்பதும் சொல்லிற்றாம்.  தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய் தன்னுடைய ஸங்கல்பத்தாலேயே ஸ்வரூபத்தை மூன்று வகுப்பாக வகுத்துக்கொண்டவன்; தானான நிலைமையிலே நின்று ஸம்ரக்ஷித்தும் ப்ரஹ்மருத்ரர்களுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டிஸம்ஹாரங்களை நடத்தியும் ஆகவிப்படி மூன்று வடிவுகளை யுடையவனென்றபடி.  தான் ஆயனாயினான் இப்படிப்பட்ட தான் இடையகளிலொருவன் ‘இவன் எனக்கு மகன்’ என்று அபிமானிக்கும்படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன்.  இப்படிப்பட்ட ஸர்வேச்வரன் நமக்குப்புகல் என்றிருப்பீரேல் திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள்.

சோழன் சேர்ந்து உய்ந்த திருப்பதியாமிது; அவன் எப்படிப்பட்டபனென்னில்; வேற்படை வல்லவனான ‘விளந்தைவேள்’ என்னுமோ ரரசனை வென்று உலகமாண்டவன்.

‘விளைந்த வேளை’ என்று பாடம் வழங்கிவரினும் ‘விளந்தை’ எனத் திருத்திக்கொள்ள வேணுமென்பர்.  ‘வளந்தை’ என்று ஓர் ஊருக்குப் பெயரென்க.

 

English Translation

Devotees! The Lord who is self-made, who made the three radiant worlds, who is the Lord of Valikunta, who himself became the Tri-murti, then also became a cowherd, resides in Tirunarayiur Manimadam, where the spear-wielding chola king Kongan offers worship.  Attain him there.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top