(1495)
வெள்ளைப் புரவைத் தேர்விச யற்காய் விறல்வியூகம்
விள்ள, சிந்துக் கோன்விழ வூர்ந்த விமலனூர்,
கொள்ளைக் கொழுமீ னுண்குரு கோடிப் பெடையோடும்,
நள்ளக் கமலத் தேற லுகுக்கும் நறையூரே.
பதவுரை
|
வெள்ளைப்புரவி தேர் விசயற்கு ஆய் |
– |
வெள்ளைக்குதிரைகள் பூட்டின தேரையுடையனான |
|
விசயற்கு ஆய் |
– |
அர்ஜுநனுக்காக |
|
விறல் வியூகம் விள்ள |
– |
(எதிரிகளினுடைய) மிடுக்கையுடைத்தான ஸேனாஸமூஹம் தொலையும்படியாகவும் |
|
சிந்து கோன் விழ |
– |
ஸிந்து தேசத்தலைவனான ஜயத்ரதன் முடியும்படியாகவும் |
|
ஊர்ந்த |
– |
(தேரை) நடத்தின |
|
விமலன் |
– |
பரிசுத்தனான பெருமானுடைய |
|
ஊர் |
– |
திவ்யதேசம் (எதுவென்றால்) |
|
கொள்ளை கொழுமீன் உண் குருகு ஓடி |
– |
மிகுதியாகக் கொழுத்த மீன்களைப் பிடித்துண்கிற கொக்குகள் ஓடிச்சென்று |
|
பெடையோடும் |
– |
தம் பேடைகளோடகூட |
|
நள்ளக் கமலம் தேறல் உருக்கும் |
– |
செறிந்த இதழ்களைடைய தாமரைப்பூவில் தேனைப் பருகப்பெற்ற |
|
நறையூர் |
– |
திருநறையூர் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அர்ஜுநனுக்குத் தேர்ப்பாகனாயிருந்து வெற்றிபெறுவித்தவனும் ஸைந்தவனை முடியச்செய்தவனுமான பெருமான் வாழுமிடம் திருநறையூர்.
அர்ஜுநனுடைய தேர்க்குதிரகைள் வெண்ணிறங்கொண்டவை யென்பது “வெள்ளைப்புரவிக்குரக்கு வெல்கொடித்தேர்மிசை முன்புநின்று, கள்ளப் படைத்துளையாகிப் பாரதங் கைசெய்யக் கண்டாருளர்” என்ற பெரியாழ்வாரருளிச்செயலாலும் விளங்கும். ‘விஜயன்’ என்பது அர்ஜுநனுடைய நாமங்களுள் ஒன்று. வியூகம் – என்னும் வடசொல் விகாரம்.
English Translation
The Lord then drove the chariot for Arjuna, with white hoses that pounded the ocean-king Jayadratha, and his strong army. He resides inNaraiyur where white storks eat big fish from waters, then go with their mates to drink nectar from lotuses.
