(1497)
தாமத் துளப நீண்முடி மாயன் தான்நின்ற
நாமத் திரள்மா மாளிகை சூழ்ந்த நறையூர்மேல்,
காமக் கதிர்வேல் வல்லான் கலிய னொலிமாலை,
சேமத் துணையாம் செப்பு மவர்க்குத் திருமாலே.
பதவுரை
|
துளபம் தாமம் நீள் முடி |
– |
திருத்துழாயினாலாகிய மாலையை நீண்ட திருமுடியிலே யுடையனான |
|
மாயன் தான் நின்ற |
– |
ஸர்வேச்வரன் நித்யவாஸம் பண்ணப்பெற்றதும், |
|
நாமம் |
– |
புகழ்பெற்றவைகளாய் |
|
திரள் மா மாளிகை |
– |
நெருங்கியிருக்கின்ற பெரிய திருமாளிகைகளினால் |
|
சூழ்ந்த |
– |
சூழப்பட்டதுமான |
|
நறையூர்மேல் |
– |
திருநறையூர் விஷயமாக,- |
|
காமம் கதிர்வேல் வல்லான் கலியன் |
– |
மிகக் வொளிபொருந்திய வேற்படையைப் பிடிக்க வல்லவரான திருமங்கையாழ்வார் |
|
ஒலி மாலை |
– |
அருளிச்செய்த இச்சொல் மாலையை |
|
செப்புமவர்க்கு |
– |
ஓதவல்லவர்களுக்கு |
|
திருமால் |
– |
திருமகள் கொழுநனான ஸர்வேச்வரன் |
|
சேமம் துணை ஆம் |
– |
எப்போதும் ரக்ஷகனான ஸஹாயபூதனாக ஆவன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நாமம் – ப்ரஸித்திப் பொருளதான வடசொல் அவ்யயம். காமக்கதிர் ‘காமம்’ என்பது மிகுதிப்பொருளதான வடமொழி அவ்யயம். விரும்பத்தகுந்த ஒளியையுடைய வேல் என்னவுமாம். சேமம் – க்ஷேமம்.
“மாயன் தாள் நின்ற நாமத்திரள் மாமாளிகை” என்று பாடங்கொண்டு எம்பெருமானுடைய ஸ்ரீபாதசின்னம் பொலிகின்ற திருமண்காப்பு விளங்குகின்ற திருமாளிகையென்பாருமுளர். திருமாளிகைக் கதவுகளிலே இவ்விலச்சினைகாண்க.
English Translation
This song garland by sparking spear wielder Kaliyan is for the Tulasi-wreathed fall-crown Lord who resides in Naraiyur surrounded by famous fall mansions. Those who master it will secure the abiding grace of Tirumal.
