(1561)
சிறியாயோர் பிள்ளையுமா யுலகுண்டோ ராலிலைமேல்
உறைவாய், என்நெஞ்சினுள் உறைவாய் உறைந்ததுதான்
அறியா திருந்தறியே னடியேன் அணி வண்டுகிண்டும்
நறைவா ரும்பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ.
பதவுரை
| அணி வண்டு |
– |
அழகிய வண்டுகள் |
| கிண்டும் |
– |
குடையப்பெற்றதும் |
| நறை வாரும் |
– |
தேன் பெருகப்பெற்றதுமான |
| பொழில் |
– |
சோலையாலே |
| சூழ் |
– |
சூழப்பட்ட |
| நறையூர், நின்ற நம்பீயோ!- ; | ||
| சிறியாயோர் பிள்ளையும் ஆய் |
– |
மிகச் சிறுகுழந்தையாய் |
| உலகு உண்டு |
– |
உலகங்களை உட்கொண்டு |
| ஓர் ஆல் இலை மேல் |
– |
ஒரு ஆலந்தளிரிலே |
| உறைவாய் |
– |
பொருந்தியிருந்தவனே! |
| என் நெஞ்சின் உள்ளே உளைவாய் |
– |
எனது நெஞ்சுக்குள்ளே வஸிப்பவனே! |
| உறைந்தது தான் |
– |
(நீ இப்படி என்னெஞ்சினுள்ளே) வாஸஞ்செய்தருள்வதை |
| அடியேன் |
– |
அடியேன் |
| அறியா திருந்தறியேன் |
– |
தெரிந்துகொள்ளாமலிருக்கவில்லை |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகங்களையெல்லாம் பிரளயங் கொள்ளப்புகுந்தவாறே அனைத்தையும் திருவயிற்றடக்கி மிகுஞானச் சிறுகுழவியாய் ஒரு சிற்றாலந்தளிரிலே துயில் கொண்டாய் என்பதைக் கேட்டார்வாய்க் கேட்டிருந்தேன்; அந்தத் திருவுருவத்தோடு இன்று என்னெஞ்சினுள்ளே வந்து உறைகின்றபடியை நன்கு தெரிந்துகொண்டேன்; மற்றையாரைப் போலே நான் நன்றியுணர்வு கெட்டவனல்லேன்; இப்பெருநன்றியைச் சிந்தியாமல் ஒருபொழுதும் நானிருப்பதில்லை என்கிறார்.
ஆலிலைமேலுறைவாய் என்னெஞ்சினுள்ளே உறைவாய் = ஆலிலைபோலே என்னெஞ்சையும் உரிய இடமாகக் கொண்டாய் என்றாவது, ஆலிலையை இகழ்ந்திட்டு என்னெஞ்சை இடமாகக் கொண்டாய் என்றாவது, கருத்துக்கொள்ளலாம்.
அணிவண்டு கிண்டும் நறைவாரும் பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ – பரமபோக்யமான திருநறையூர்ப்பதி உனக்கு இருப்பிடமாக அமைந்திருக்கச் செய்தேயும் அதனையும் விட்டு என்னெஞ்சிலே உறைகின்றாயாதலால் உன்விஷயத்திலே அடியேன் சாலவும் க்ருதஜ்ஞனா யிராநின்றேனென்றவாறு.
English Translation
Came as babe, you swallowed all and seeping, lay on a floating leaf! Lord eternal staying in my heart, unknown to me then! Nectar-dripping groves with bumble-bees surround your temple. How can I now forget you, Naraiyur lord-in-residence, O!
