(1428)
கையிலங் காழி சங்கன் கருமுகில் திருநி றத்தன்,
பொய்யிலன் மெய்யன் தந்தாள் அடைவரே லடிமை யாக்கும்,
செய்யலர் கமல மோங்கு செறிபொழில் தென்தி ருப்பேர்
பையர வணையான் நாமம் பரவிநா னுய்ந்த வாறே,
பதவுரை
|
ஐக இலங்கு அழி சங்கன் |
– |
திருக்கையிலே விளங்குகின்ற திருவாழி திருச்சங்கையுடையவனும் |
|
கரு முகில் திரு நிறத்தன் |
– |
காளமேகம்போன்ற திருநிறத்தை யுடையவனும் |
|
பொய் இலன் |
– |
(சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ள வைலக்ஷண்யங்களில்) பொய்யில்லாதவனும் |
|
மெய்யன் |
– |
(அந்த வைலக்ஷண்யங்களைத் தன்னடியார்கட்கு) மெய்யே காட்டிக் கொடுப்பவனும் |
|
தன் தாள் அடைவர் ஏல் அடிமை ஆக்கும் |
– |
(யாராவது) தன் திருவடிகளைப் பணிவாராகில் (அவர்களை) நித்ய கைங்கரிய நிஷ்டராக ஆக்கிக் கொள்பவனும், |
|
அலர் கமலம் ஓங்கு செய் |
– |
மலர்ந்த தாமரைகள் உயர்ந்திருக்கப்பெற்ற கழனிகளையும் |
|
செறி பொழில் |
– |
அடர்ந்த சோலைகளையும் உடைத்தான |
|
தென் திருப்பேர் |
– |
தென்திருப்பேர் நகரில் |
|
பை அரசு அணையான் |
– |
பரந்த படங்களையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையனமான பெருமானுடையனுமான பெருமானுடைய |
|
நாமம் நான் பரவி உய்ந்த ஆறு ஏ |
– |
திருநாமங்களை நான் சொல்லி உஜ்ஜீவித்தபடி என்னே!. |
English Translation
The dark cloud-cued Lord, wielder of the beautiful conch and discus, is no falsity but real, He accepts those who seek his refuge and makes them his devotees. Amid the lotus-filled tanks and groves of Ten-Tirupper, he reclines on a hooded serpent, How easily have I attained him through chanting his names!
