(1358)
தாம்தம் பெருமை யறியார், தூது
வேந்தர்க் காய வேந்த ரூர்போல்,
காந்தள் விரல்மென் கலைநன் மடவார்,
கூந்தல் கமழும் கூட லூரே.
பதவுரை
|
தம் பெருமை தாம் அறியார் |
– |
தமது பெருமேன்மையைத் தாமும் அறியாதவரும் |
|
வேந்தர்க்கு தூது ஆய வேந்தர் |
– |
(பாண்டவ) மன்னர்கட்கு தூதனாய்ச் சென்றவருமான தேவாதி தேவருடைய |
|
ஊர் |
– |
திவ்யதேசம் (எதுவென்றால்) |
|
காந்தன் விரல் மென் கலை நல் மடவார் |
– |
செங்காந்தன் மலர்போன்ற விரல்களையுடையவரும் அழகிய ஆடையணிந்தவர்களுமான நல்ல பெண்டுகளினுடைய |
|
கூந்தல் கமழும் |
– |
கூந்தல்களானவை பரிமளம் வீசப்பெற்ற |
|
கூடலூர் – |
– |
திருக்கூடலூராகும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான் தான் ஸர்வஜ்ஞனென்றும் ஸர்வசக்தனென்றும் வேத வேதாந்தங்களினால் ஓதப்பட்டாலும் அவன் தன் பெருமையைத் தானறியவல்லனல்லன்; ‘உனக்கு இவ்வளவு பெருமையுண்டு’ என்று பிறர் சொல்லக்கேட்பவனேயன்றி, தன்பெருமை தானறியானவன்.
அவனக்குப் பெருமையாவது பரத்வம்பொலிய நிற்குமதன்று; ஏவிக் காரியங் கொள்ளலாம்படி தன்னைத் தாழவிட்டுக் கொண்டிருக்கு மிருப்பு இங்குப் பெருமை யெனப்படுகிறது. இப்பெருமையை மூதலிக்கிறார் “தூது வேந்தர்க்காய வேந்தர்” என்பதனால். பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலைகட்டித் தூது சென்ற பாண்டவதூதனென்று பேர்பெற்றான்; இப்படி இவன் இழிதொழில் செய்தாலும் ‘பராத்பரனா யிருப்பவன் இப்படி இழிதொழில் செய்யப்பெறுவதே!’ என்று அறிவித்திறந்தோர் ஈடுபடும்படி யிருக்குமத்தனையன்றி இழிவகக்கருத இடமில்லையே; ராஜாதிராஜன் என்கிற பெருமையும் மிக்குத்தோன்றுமென்கிறார் – “வேந்தர்க்குத் தூ தாய வேந்தர்” என்பதனால். இப்படி பரத்வஸௌலப்யங்கள் விகல்பிக்கலாம்படியுள்ள எம்பெருமான் திருக்கூடலூரிலுள்ளான். அவ்வூர் எத்தகையதென்னில்; செங்காந்தள் மலர்போன்ற விரல்களையுடையரும் மெல்லிய அழகிய ஆடைகளை அணிந்தவர்களுமான நன்மடவார்களின் கூந்தல் மணம் கமழப்பெற்றதாம்.
நூற்றெட்டுத் திருப்பதிகளுள் திருக்கூடலூர் இரண்டு உண்டு; ஒன்று பாண்டிநாட்டிற் சேர்ந்தது; அதுவே தென்மதுரை யெனப்படும். மற்றொன்று சோழநாட்டிற் சேர்ந்தது : அது ‘ஆடுதுறைப் பெருமாள்கோயில்’ என வழங்கப்படும். இத்தலமே இத்திருமொழிக்கு விஷயம். தேவர்கள் கூட்டமாகக்கூடி எம்பெருமானை வணங்கி வாழ்த்தப்பெற்ற தலமென்பது பற்றி இதற்குக் கூடலூர் என்று திருநாமமாயிற்றென்பர்
English Translation
Unassuming of their excellence, -like the Lord who through himself a king, went as a messenger for the kings, -beautiful dames with fingers thin as glory-lily petals, and dressed in soft material, move around wafting the fragrance of their coiffure in the Lord’s own kudalur.
