(1366)

(1366)

பெருகு காத லடியேன் உள்ளம்,

உருகப் புகுந்த வொருவ ரூர்போல்,

அருகு கைதை மலர, கெண்டை

குருகென் றஞ்சும் கூட லூரே.

 

பதவுரை

பெருகு காதல்

வளர்ந்துவரும் ஆசையையுடையேனான

அடியேன்

அடியேனுடைய

உள்ளம்

மனமானது

உருக

கரையும்படியாக

புகுந்த

உள்ளே பிரவேசித்திருக்கிற

ஒருவர்

விலக்ஷண புருஷனுடைய

ஊர்

திவ்யதேசம்;

அருகு

ஸமீபத்திலே

கைதை

தாழைகள்

மலர

மலர்ந்திருக்க (அதனைக் கண்டு)

கெண்டை

கெண்டை மீன்கள்

குருகு என்று அஞ்சும்

(தம்மைப் பிடித்துண்ண வந்திருக்கிற) நாரைகளென்றெண்ணி அஞ்சுமிடமான

கூடலூர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாட் செல்ல நாட் செல்ல ஆற்றுப் பெருக்குப்போலே பெருகா நின்றுள்ள காதலைக் கொண்ட அடியேனுடைய ஹ்ருதயம் உருகும்ப்டியாக உட்புகுந்த பெருமான் வாழுமிடம் திருக்கூடலூர்.  அங்கே வாய்க்காற் கரைகளில் தாழம்பூக்கள் மலர்ந்திருக்கும்; அவற்றைக் கண்ட கெண்டை மீன்கள் குருகுகள் நம்மை இரை கொள்வதற்காக வந்து ஸ்தப்தமாய் நிற்கின்றன போலும்’ என்றெண்ணி அஞ்சி யொளிக்கின்றனவாம்.

கைதை – ‘கேதகீ’ என்னும் வடசொல்விகாரம்.  குருகு – கொக்கு.

 

English Translation

With love for him rising in my heart, the Lord has come to reside in kudalur, where screwpine bursts into blossoms, and kendai-fish live in fear taking them to be storks.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top