(1446)
வங்கமலி பௌவமது மாமுகடி னுச்சிபுக மிக்க பெருநீர்,
அங்கமழி யாரவன தாணைதலை சூடுமடி யார றிதியேல்,
பொங்குபுன லுந்துமணி கங்குலிருள் சீறுமொளி யெங்கு முளதால்,
நங்கள்பெரு மானுறையும் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
பதவுரை
|
மனமே |
– |
நெஞ்சமே!, |
|
அவனது ஆணை |
– |
அப்பெருமானுடைய திருவாணையை |
|
தலை சூடும் அடியார் |
– |
சிரஸா வஹிக்கின்ற பக்தர்கள், |
|
வங்கம் மலி பௌவம் அது |
– |
மரக்கலங்கள் நிறைந்த ஸமுத்ரமானது |
|
மா முகடின் உச்சி புக |
– |
உயர்ந்துள்ள அண்ட பித்தியினுடைய தலையளவுஞ் சென்று வியாபிக்கும்படி |
|
மிக்க |
– |
பொங்கிக்கிளர்ந்த |
|
பெரு நீர் |
– |
(ஊழிப்) பெரு வெள்ளத்திலும் |
|
அங்கம் அழியார் |
– |
சரீர நாசத்தை அடைய மாட்டார்கள்; |
|
அறிதி ஏல் |
– |
(நீ இதை) அறிவாயேல், |
|
பொங்கு புனல் உந்தும் மணி |
– |
பெருகாநின்ற ஜலமானது தள்ளிக்கொண்டு வருகின்ற நவமணிகளின் |
|
கங்குல் இருள் சீறும் ஒளி |
– |
இரவிருளைப் போக்குகின்ற பிரகாசமானது |
|
எங்கும் உளது |
– |
எங்கும் வியாபித்திருக்கப்பெற்றதாய் |
|
நங்கள் பெருமான் உறையும் |
– |
எம்பெருமான் நித்யவாஸம் பண்ணுமிடமான |
|
நந்திபுரவிண்ணகரம், நண்ணு–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பகவத்கீதையில் (14-2)1. இதம் ஜ்ஞாநமுபாச்ரித்ய மம ஸாதர்ம்ய மாகதா;, ஸர்கேபி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்ய்தந்தி ச” என்றாற்போலே அருளிச்செய்வன முன்னடிகள். நெஞ்சமே! எம்பெருமானுடைய ஆஜ்ஞையாகிய வேதம் முதலிய சாஸ்த்ரங்களைச் சிறமேற்கொண்டு அவற்றின்படியே நடக்குமவர்கள் ஒருகாலும் கெடுதலடைமாட்டார்கள்; ஊழிப்பெரு வெள்ளத்திலும் (மார்க்கண்டேயனைப்போலே) அழியாதிருப்பவர்கள் என்பது உனக்குத் தெரியுமாயின் நீயும் இவர்களைப்போலேயாக விரும்பி நந்திபுரவிண்ணகரத்தை நண்ணுவாயாக என்கிறார்.
பிரளயகாலத்தில் கடல்கிளர்ந்து மேலே அண்டபித்தியளவுஞ் சென்று நூக்கினாலும் அழியமாட்டார்களென்றது – பிறப்பதும் இறப்பதுமாகிற விகாரங்களுக்கு ஆளாகாமல்ழூ பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து பல்லாண்டேத்தப் பெறுவர் என்றவாறு.
அவனது ஆணை = “ச்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்க வர்த்ததே” ஆஜ்ஞாச்சே தீ மம த்ரோஹீ மத்பக்தோபி ந வைஷ்ணவ:” என்ற பகவத்வாக்யம் இங்கு அறியத்தக்கது. (இதன் பொருள் – வேதங்களும் வேதாங்கங்களும் என்னுடைய ஆணையேயாம்; இவ்வாணையைமீறி நடப்பவன் என்னை த்ரோஹம் பண்ணினவனாவன்; அவன் என்னிடத்தில் பக்தி பண்ணுமவனாயினும் அவைஷ்ணவனே யாவன் என்கை.
(பொங்குபுனல் இத்யாதி.) இத்தலம் நல்ல நீர்வாய்ப்பு அமைந்தது; அந்நீர்ப் பெருக்கில் பலபல மணிகள் கொழிக்கப்பட்டுவரும்; அவற்றின் ஒளி எங்கும்பரவி எப்போதும் பகல்போலவே யிருக்குமாம். “உளதால்” என்றவிடத்து ஆல் – ஆசை.
மேலே சொல்லப்போகிற ஜ்ஞாநயோகத்தைக் கைப்பற்றி என்னோடு ஸாம்யமடைந்தவர்கள் ஸ்ருஷ்டியிலும் ஸம்ஹாரத்திலுமகப்பட்டு வருந்தமாட்டார்களென்று பகவானுடைய வாக்கியம்.
English Translation
When the flood of deluge waters rise and touch the sky, those who carry the Lord’s will on their heads will come to no harm, know this O Heart, Our Lord resides amid waters that spil gems which make day out of night, by their radiance. Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram, our destination.
