(1348)
அறிவ தரியா னனைத்துலகும் உடையா னென்னை யாளுடையான்
குறிய மாணி யுருவாய கூத்தன் மன்னி யமருமிடம்,
நறிய மலர்மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட,
பொறிகொள் சிறைவண் டிசைபாடும் புள்ளம் பூதங் குடிதானே!
பதவுரை
|
அறிவது அரியான் |
– |
(ஒருவர்க்கும் தம் முயற்சியாலே) அறியக் கூடாதவனும் |
|
அனைத்து உலகும் உடையான் |
– |
எல்லாவுலகங்கட்கும் ஸ்வாமியானவனும் |
|
என்னை ஆள் உடையான் |
– |
அடியேனை அடிமை கொண்டவனும் |
|
குறிய மாணி உரு ஆய |
– |
வாமநப்ரஹ்மசாரி வேஷங்கொண்டவனும் |
|
கூத்தன் (அவ்வேஷத்தோடு மாவலி வேள்வியில் எழுந்தருளும் போது) |
– |
விலக்ஷணமான நடையிட்டு எழுந்தருளினவனுமான பெருமான் |
|
மன்னி அமரும் இடம் |
– |
இடைவிடாது நித்யவாஸம் பண்ணுமிடமாவது;- |
|
சுரும்பு நறிய மலர்மேல் ஆர்க்க |
– |
‘சுரும்பு’ என்னுஞ் சாதி வண்டுகள் மணம்மிக்க புஷ்பங்களின் மீது (இருந்து கொண்டு) ரீங்காரம் செய்யப்பெற்றதும் |
|
எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட |
– |
அழகுபொருந்திய மயில்கள் கூத்தாடப் பெற்றதும் |
|
பொறி சிறை கொள் வண்டு இசை பாடும் |
– |
வரியையும் சிறகையுமுடைய வண்டினங்கள் இசைபாடப் பெற்றதுமான |
|
புள்ளம் பூதக்குடி |
– |
திருப்புள்ளம் பூதக்குடியென்னுந் திருப்பதியாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அறிவதரியான் = அறிய முடியாதவன் என்றால், ‘ஒருவராலும் அறிய முடியாதவன்’ என்று பொருளா? அன்றி, ‘சிலரால் அறிய முடியாதவன்? என்று பொருளா?’ என்று கேள்வி பிறக்கும்; ஒருவராலும் அறிய முடியாதவன் என்றால் முயற்கொம்பு, மலடிமகன், ஆகாசத்தாமரை முதலிய பொருள்கள் போல எம்பெருமானும் அடியோடு இல்லாதவன் என்றதாரும் : ஆகையாலே அது பொருளன்று; ‘பகவத் ஸ்வரூபத்தை நாமே முயன்று அறிந்திடுவோம் என்று முயல்பவர்களால் அறியக் கூடாதவன் என்று பொருள் கொள்க. அவன் தானே தன் இன்னருளாலே தன் ஸ்வரூபஸ்வபாவங்களைக் காட்டிக்கொடுக்க அப்போது அறியலாகுமேயன்றி வேறுவிதமாக அறியலாகாதென்கை. “திவ்யம் ததாமி தே சக்ஷ{: பச்யமேயோகமைச்வரம்” என்று அர்ஜுநனுக்குக் காட்டிக் கொடுத்தாற் போலக் காட்டிக் கொடுக்கில் காணவழியுண்டு.
English Translation
The-hard-to-comprehened Lord, bearer of all the worlds, who keeps me in this service, came as a little manikin and, danced over the worlds; he resides permanently, -amid groves where; little bees provide the drone for the bumble-bees that sing for the dance of the handsome peacocks,-in Pullam-Budangudi, yes, always!
