(1468)
துறப்பேன் அல்லேனின் பம்துற வாது, நின்னுருவம்
மறப்பே னல்லேனென் றும்மற வாது, யானுலகில்
பிறப்பே னாகவெண் ணேன்பிற வாமை பெற்றது,நின்
திறத்தே னாதன் மையால் திருவிண் ணகரானே.
பதவுரை
|
திருவிண்ணகரானே!- |
||
|
இன்பம் |
– |
(உன் அநுபவத்தினாலுண்டாகக்கூடிய) பேரின்பத்தை |
|
துறப்பேன் அல்லேன் |
– |
தவிரமாட்டேன்; |
|
துறவாது |
– |
அவ்வின்பத்தைத்தவிராதவனாகி |
|
என்றும் |
– |
ஒருநாளும் |
|
நின் உருவம் மறப்பேன் அல்லேன் |
– |
உன்வடிவழகை மறவாதவனாயிருக்கின்றேன்; |
|
மறவாது |
– |
அவ்வடிவழகை மறவாதவனாகி |
|
யான் |
– |
நான் |
|
உலகில் |
– |
ஸம்ஸாரத்தில் |
|
பிறப்பேன் ஆக எண்ணேன் |
– |
இனிப் பிறவியெடுக்க எண்ணமற்றவனாயிருக்கின்றேன்; |
|
பிறவாமை பெற்றது |
– |
இனிப்பிறவாதபடி பேறுபெற்ற இதுதானும் |
|
நின் திறத்தேன் ஆதன்மை யால் |
– |
உனக்கே ஆட்பட்டதனாலேயாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சிற்றின்பங்களை நான் துறப்பேனேயன்றி, தேவரீருடைய அநுபவமாகிற பேரின்பத்தை ஒருநாளும் இழக்கமாட்டேன்; தேவரீருடைய வடிவழகு என்னால் மறக்கமுடியுமாகிலன்றோ இன்பத்தை நான் துறந்தவனாவேன்; வடிவழகை மறவாதவனாகையாலே இனபத்தைத் துறவாதவனாயினேன்; இப்படிப்பட்ட நான் இனிமேலும் இவ்விருள் தருமாஞாலத்தில் பிறந்து பிறந்து கஷ்டங்கள்பட நினைப்பேனோ? “மறந்தேனுன்னைமுன்னம்” என்று கீழ்நாட்களில் தேவரீரை மறந்திருந்தேனாகிலும் இனிமேலுள்ள காலம் மறவாதேயிருக்கப் பாரித்திருப்பவனாதலால் அடியேன் பிறவித்துயர்நீக்கி நித்யானந்த மநுபவிக்கவே உரியேனாயினேன் என்றாராயிற்று.
கீழ்த்திருமொழியில் “மறந்தேனுன்னை முன்னம் – அதனாலிடும்பைக்குழியிற் பிறந்தே யெய்த்தொழிந்தேன்” என்று மறதிக்குப் பலனாகப் பிறவித்துன்பம் பெற்றமை சொன்னார்; இதில் மறவாமைக்குப் பிறவாமைபெற்றமை சொன்னாரென்க.
English Translation
O Lord of Tiruvinnagar! I have renounced all pleasures, always remembering your beautiful form. No more shall I be born on Earth. Freed of birth I have come to you, by your grace.
