(1477)
தாரார் மலர்க்கமலத் தடஞ்சூழ்ந்த தண்புறவில்,
சீரார் நெடுமறுகில் திருவிண் ணகரானை
காரார் புயல்தடக்கைக் கலிய னொலிமாலை,
ஆரா ரிவைவல்லார் அவர்க்கல்லல் நில்லாவே.
பதவுரை
|
தார் ஆர் மலர் |
– |
இதழ்மிக்க பூக்களையுடைத்தான |
|
கமலம் தடம் |
– |
தாமரைத் தடாகங்களினால் |
|
சூழ்ந்த |
– |
சூழப்பட்ட |
|
தண் புறவின் |
– |
குளிர்ந்த தோட்டங்களை யுடையதாய் |
|
சீர் ஆர் நெடு மறுகில் |
– |
செல்வம் மிக்க நீண்ட வீதிகளையுடையதான |
|
திரு விண்ணகரானை |
– |
திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கிற அப்பன்விஷயமாக, |
|
கார் ஆர் புயல் தடக்கை கலியன் |
– |
காளமேகம் போன்று ஔதார்யத்தையுடைய நீண்ட கைகளையுடையரான திருமங்கையாழ்வார் |
|
ஒலி |
– |
அருளிச்செய்த |
|
மாலை |
– |
சொல்மாலையாகிய |
|
இவை |
– |
இப்பாசுரங்களை |
|
ஆர் ஆர் வல்லார் |
– |
எவரெவர் ஓதுகின்றனரோ, |
|
அவர்க்கு |
– |
அவரவர்கட்கு |
|
அல்லல் |
– |
பாவங்கள் |
|
நில்லா |
– |
தங்கமாட்டாமல் ஓடிப்போய்விடும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அடிவரவு – துறப்பேன் துறந்தேன் மானேய் சாந்து மற்றோர் மை வேறே முளிந்தீந்த சொல்லாய் தாரார் கண்ணும்.
திருவிண்ணகர்த்திருப்பதி விஷயமான ஓர் ஆராய்ச்சி:- இத்தலம் உப்பிலியப்பன் ஸண்ணிதியென்று வழங்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப இத்தலத் தெம்பெருமானுக்கு நிவேதனமாகும் ப்ரஸாத மொன்னிறலும் அடியொடு உப்பு சேர்ப்பது கிடையாது. உப்பு என்கிற பதார்த்தம் இந்த ஸன்னிதிக்குள் புகவே கூடாதென்று கடுமையான கட்டளை நெடுநாளகவேயுள்ளது. ஸ்தல புராணமும் இதற்கிணங்க அமைந்துள்ளது. ஆனால், ஆழ்வாரருளிச் செயலே நோக்குமிடத்து ‘ஒப்பிலியப்பன்‘ என்பதே எம்பெருமானது திருநாமமென்று விளங்காநின்றது. * தன்னொப்பாரில்லப்பன் தந்தனன் தனதான் நிழலே * என்று திருவாய்மொழியில் (6-3-9) இத்தலத்துட் பதிகத்தில் நம்மாழ்வார் அருளிச் செய்துளர். “ஒப்பிலாவென்னப்பா“ என்று திருமங்கையாழ்வாருடைய திருவாக்கு உள்ளது. தன்னொடொப்பார் ஒருவருமில்லாதவன் என்பது பற்றி ‘ஒப்பிலியப்பன்‘ என்று திருநாமாயிற்று. இவ்வுண்மையைத் தெரிந்து கொள்ளாதவர்கள் உப்பிலியப்பனென்றாக்கி ஸ்தலபுராணமு மொன்று இயற்றி மாறுபடுத்தி விட்டார்களென்று சிலர் கூறுவதுண்டு. அது வேண்டா. ஆழ்வார்களிட்ட திருநாமம் ஒப்பிலியப்பன், புராண வரலாற்றின்படி அமைந்த திருநாமம் உப்பிலியப்பன் என்று கொள்வதில் குறையொன்றுமில்லை யென்பார் பெரியோர்.
English Translation
This garland of sweet Tamil songs has been sung by generous-as-the-dark-cloud kaliyan for the Lord of Tiruvinnagar surrounded by groves and water tanks with fresh lotus thickets, and laid out with wide streets. Those who master it will have no Karmic accounts.
