(1299)

(1299)

மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான்,

விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய்

துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய,

கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

 

பதவுரை

எனம் ஆகி மண் இடந்து

ஆதிவராஹமாகி (அண்டபித்தியில் அழுந்திக்கிடந்த) பூமியைப் பிரித்துக் கொணர்ந்தவனாயும்

மாவலி வலி தொலைப்பான்

மஹாபலியினுடைய மிடுக்கைப்போக்குமாறு

விண்ணவர் வேண்ட

தேவர்கள் யாசிக்க (அதற்கிணங்கி)

வேள்வியில் சென்று

(அந்த மாவலியின்) யாக பூமியில் எழுந்தருளி

குறை இரந்தாய்

தனக்கு வேண்டியதை யாசித்துப் பெற்றவனே!,

மாற்றார் தம்மை துண்ணென தொலைத்தவர் நாங்கை மேய

பகைவர்களைச் சீக்கிரமாக வென்று ஒழித்தவர்கள் வாழ்கிற திருநாங்கூரில் பொருந்தியிருக்கிற

சாவளந்தண்பாடியாய்! கண்ணனெ!

நீயே களைகண்.

 

English Translation

O, Krishna! You came as a boar and lifted the Earth. You went to Mabali’s sacrifice and begged, then subdued him to favour the gods. You reside with easy-winner-seers in Nanguru’s kavalampadi. You are my sole refuge!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top