(1270)

(1270)

திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும் செழுநிலத் துயிர்களும் மற்றும்,

படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை, பங்கயத் தயனவ னனைய, திடமொழி

மறையோர் நாங்கைநன் னடுவுள்  செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.

 

பதவுரை

திடம்

திடமான

விசும்பு எரி நீர்

ஆகாசம் அக்நி ஜலம் முதலான பஞ்சபூதங்களும்

திங்களும்

சந்திரனும்

சுடரும்

ஸூர்யனும்

செழு நிலத்து பிராணிகளும்

வளம்மிக்க பூமியிலுள்ள பிராணிகளும்

மற்றும் படர் பொருள்களும்

மற்றும் பலவகைப்பட்ட பதார்த்தங்களும் (ஆகிய இவற்றுக்கு)

ஆய் நின்றவன் தன்னை

அந்தர்யாமியா யிருப்பவனும்

கடல் நிறம் வண்ணன் தன்னை

கடலின் நிறம் போன்ற திருமேனியை யுடையனுமான பெருமானை

பங்கயத்து அயன் அவன் அனைய

தாமரையிற் பிறந்த பிரமனைப் போன்றவர்களாய்

திடம் மொழி மறையோர்

திடமான வாக்கையுடையவர்களான அந்தணர்கள் வாழ்கிற

நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய்

கோயிலின் உள்ளே அடியேன் நான் கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருநாங்கூரிலுள்ள அந்தணர்கள் பிரமனைப் போன்றவர்களென்ற – எப்போதும் வேதாத்யயந சீலர்களால் ஆசாரபார்களாயிருக்கையை நோக்கியாம்.  பிரமனைப்போலே ஜகத்ஸ் ருஷ்டி பண்ணவும் வல்ல ரென்னவுமாம்.  திடமொழி மறையோர் – சொன்னசொல் தவறாத ஸத்யசீலர்.

 

English Translation

Sky, Fire, water, Moon and the Sun too, Earth and the beings-living all, -He who is all these and other things too, lives in the midst of Brahma-like Firm-of-speech-Vedic-Seers residing in Nangur, -Semponsei Koyil is in their midst, -seening my lady-lord, dark as the ocean, I have found my spiritual elevation.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top