(1253)
ஞாலமெல்லா மமுதுசெய்து நான்மறையும் தொடராத
பாலகனா யாலிலையில் பள்ளிகொள்ளும் பரமனிடம்,
சாலிவளம் பெருகிவரும் தடமண்ணித் தென்கரைமேல்
சேலுகளும் வயல்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே.
பதவுரை
| நால் மறையும் தொடராத |
– |
நான்கு வேதங்களாலும் எட்டிப்பிடிக்க முடியாத (பெருமைபொருந்திய) | |
| பாலகன் ஆய |
– |
இளங்குழந்தையாய்க்கொண்டு | |
| ஞாலம் எல்லாம் |
– |
பூமிமுழுவதையும் | |
| அமுது செய்து |
– |
விழுங்கி | |
| ஆல் இலையில் |
– |
ஆலந்தளிரில் | |
| பள்ளி கொள்ளும் |
– |
திருக்கண்வளர்ந்தருளுகிற | |
| பரமன் |
– |
எம்பெருமானுடைய | |
| இடம் |
– |
திருப்பதி (எதுவென்றால்), | |
|
தடமண்ணித் தென்கரை மேல்; |
|||
| சாலி |
– |
செந்நெற் பயிர்களினுடைய | |
| வளம் |
– |
செழிப்பானது | |
| பெருகிவரும் |
– |
அதிகப்பட்டு வராநிற்பதாய் | |
| சேல் உகளும் |
– |
மீன்கள் துள்ளி விளையாடப் பெற்றதான | |
| வயல் |
– |
கழனிகளையுடைய | |
| நாங்கை |
– |
திருநாங்கூரில் | |
|
திருத்தேவனார் தொகையே |
|||
| சாலி |
– |
தற்சமவடசொல் | |
English Translation
The Lord, whom even the Vedas fail to comprehend, swallowed the Universe and slept as a child on a fig leaf. He resides at Nangur on the Southern banks of the river Manni amid fertile fields where Sel-fish dance, in Tiruttevanar Togai.