(1035)

(1035)

நோற்றேன் பல்பிறவி யுன்னைக்காண்பதோ ராசையினால்*

ஏற்றே னிப்பிறப்பே யிடருற்றன னெம்பெருமான்!*

கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ் வேங்கடவா!*

ஆற்றேன் வந்தடைந்தே னடியேனையாட்கொண்டருளே.

பதவுரை

கோல் தேன் பாய்ந்து ஒழுகும்

கோல்களின்றும் தேன் இழிந்து வெள்ளமிடா நின்ற

குளிர் சோலை சூழ் வேங்கடவா

குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமலையில் வாழ்பவனே!

எம்பெருமான்

அஸ்மத் ஸ்வாமியே!,

பல் பிறவி நோற்றேன்

எனக்குப் பல பிறவிகள் உண்டாகும்படி காரியம் செய்து வைத்தேன்.

உன்னை காண்பது ஓர் ஆசையினால்

உன்னை ஸேவிக்கவேணுமென்று ஒரு காதல் கிளர்ந்த படியினாலே

இப்பிறப்பே ஏற்றேன்

இந்த ஜந்மத்திலே உனக்கு அன்பனாக ஏற்பட்டேன்.

இடர்உற்றனன்

(இன்னமும் நேரக்கூடிய பிறவிகளை நினைத்து) துக்கப்படா நின்றேன்;

(இனி பிறவிகள் நேராமைக்காக)

வந்து அடைந்தேன்-.

அடியேனை ஆள் கொண்டருள்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

#1035

நோற்றேன் பல் பிறவி ; நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்;
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன்எம் பெருமான்!;
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா!;
ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே. [1-9-8]

 

        *** [நோற்றேன்பல்பிறவி.] நோற்கையாவது – ஸங்கல்பிக்கை; பல பிறவிகளை ஸங்கல்பிக்கையாவது – பலபிறவிகள் உண்டாகும்படி கருமங்களைச் செய்தலாம். இப்படி பல பிறவிகளும் பிறந்து கொண்டேவரச் செய்தே யாத்ருச்சிக ஸுக்ருத விசேஷத்தாலே உன்னைக் காணவேணுமென்று ஆசைபிறந்தது இப்பிறவியில்; அதனால், இதற்குக்கீழ் நாம் நின்ற நிலை மிகவும் பொல்லாதென்று நெஞ்சில் பட்டது. இதுவரையில் நடந்தவற்றையும் இனி நடக்கப் போகிறவற்றையும் நினைத்து ஸஹிக்கமாட்டாமல் உன் திருவடிகளை வந்து பணிந்தேன், அடியேனை ஆட்கொண்டருளவேணும்-என்றாராயிற்று.

        “உன்னைக் காண்பதோராசையினால் பல்பிறவி நோற்றேன், இப்பிறப்பே ஏற்றேன்” என்று அந்வயித்து, “உன்னை ஸேவிக்கவேணுமென்று பலபல பிறவிகளில் நோன்பு நோற்றேன்; இதுவரையில் உன்னுடைய ஸேவை கிடைக்கப் பெற்றிலேன்; இப்பிறவியில் பாக்கியம் வாய்த்தது; கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாய்ப்போயிற்றேயென்று இடருற்றேன்” – என்றும் உரைப்பர். இதனிலும் முன்ன முரைத்த பொருளே சிறக்கும்….(8)

English Translation

I have gone through many lives. In this life I became ready to atone for my unbearable. Karmic past; because of my desire to see you. O Lord of Tiruvenkatam hills, with cool groves where beehives on branches overflow with honey! I have come to you. Pray take me into your service!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top