(1034)

(1034)

தெரியேன் பாலகனாய்ப் பலதீமைகள் செய்துமிட்டேன்*

பெரியே னாயினபின் பிறர்க்கேயுழைத் தேழையானேன்*

கரிசேர் பூம்பொழில் சூழ் கனமாமலை வேங்கடவா!*

அரியே! வந்தடைந்தே னடியேனையாட்கொண்டருளே.

பதவுரை

கரி சேர்

யானைகள் மிகுந்திருக்கப் பெற்றதும்

பூ பொழில் சூழ்

அழகிய சோலைகளாலே சூழப்பட்டும்

கனம் மா மலை வேங்கடவா

திண்ணியதாயு மிருக்கிற திருமலையிலே வாழ்பவனே!

அரியே

ஹரியே!

பாலகன் ஆய்

சிறியேனாயிருந்தபோது

தெரியேன்

அறிவில்லாதவனாய்

பல தீமைகள்

பல பாவங்களை

செய்தும் இட்டேன்

செய்து தீர்த்தேன்;

பெரியேன் ஆயின பின்

யௌவன பருவ மடைந்த பின்பு

பிறர்க்கே உழைத்து

விஷயாந்தர பரனாய் ச்ரமப் பட்டு

ஏழை ஆனேன்

சதிர்கெட்டுப்போனேன்;

(இப்படிப்பட்ட அடியேன்)

வந்து அடைந்தேன்-;

அடியேனை ஆள் கொண்டருள்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய  விளக்க உரை

#1034

தெரியேன் பாலகனாய், பல தீமைகள் செய்துமிட்டேன்;
பெரியேன் ஆயினபின், பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்;
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா!;
அரியே! வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே. [1-9-7]

 

        ***[தெரியேன் பாலகனாய்.] “கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்” என்றும் “தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ச்ரேயஸே ஸதா” என்றும் இளம்பிராயத்திலே நல்லதுகளைக் கற்கும்படி சொல்லியிருப்பதற்கு எதிர்த்தட்டாக நான் இளம்பிராயத்திலே அவிவேகியாய்ப் பல தப்புக்காரியங்களைச் செய்துவிட்டேன்; பிறகு யௌவனம் வந்து முகங்காட்டினவாறே, எந்த வஸ்துவைக்கண்டாலும் ‘இது அவளுக்காகும், இது அவளுக்காகும்’ என்றே கொண்டு பலவற்றையும் மாதர்க்காகத்தேடித்திரிந்து அலைந்து சதிர்கேடனானேன்; போன காலமெல்லாம்பழுதேபோனாலும், இனியாகிலும் ப்ராப்தவிஷயத்திலே தொண்டு பூண்டமுதமுண்ணப்பெறலாமென்று திருவடிகளின் கீழே வந்து சேர்ந்தேன், ஆட்கொண்டருள வேணும் என்றாராயிற்று. முதலடியை இரண்டு வாக்கியமாகவும் உரைக்கலாம்; பாலகனாய் தெரியேன் – சில நாள் மிக்க இளம்பருவமாய் யுக்தாயுக்தங்களறியாதே கிடந்தேன். பல தீமைகள் செய்துமிட்டேன் – (சிறிது அறிவு உண்டான பின்பு) தோன்றினபடிபலதீமைகள் செய்து திரிந்தேன் என்கை. அரியே! – ஹரி என்ற வடசொல் அரியெனத்திரிந்தது. என்னுடைய பாவங்களை யெல்லாம் ஹரிப்பவனே! என்றும், சிங்கம் போல் ஒருவராலும் அடர்க்கவொண்ணாதவனே! என்றும் உரைக்கலாம். (ஹரி – சிங்கம்)…(7)

English Translation

Even as a lad, unknowingly, I did many wicked things, when I grew up, I can after others and lost myself. O Lord of elephant-roaming-groves Tiruvenkatam hills, my Master! I have come to you. Pray take me into your service!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top