(904)
மெய்யெலாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டு
பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்க னேஉன் அருளென்னு மாசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்ய னேனே
பதவுரை
| மெய்எல்லாம் |
– |
மெய்யான (நினைவு, சொலவு, செயல் ஆகிய ) எல்லாவற்றையும் |
| போகவிட்டு |
– |
நீக்கிவிட்டு |
| விரி குழலாரில் பட்டு |
– |
விரிந்த கூந்தலையுடைய மாதர் திறத்தில் ஆழங்காற்பட்டு (அகப்பட்டு) |
| பொய் எல்லாம் |
– |
எல்லாவிதமான பொய்களையும் |
| பொதிந்து கொண்ட |
– |
நிறைத்துக்கொண்டிருக்கிற |
| போழ்க்கனேன் |
– |
க்ருத்ரிமனான அடியேன் |
| ஐயனே |
– |
ஸ்வாமின்!! |
|
அரங்கனே!-; |
||
| உன் அருள் என்னும் ஆசை தன்னால் |
– |
தேவரீருடைய க்ருபையிலேயுண்டான ஆசையினாலே |
|
வந்து நின்றேன்-; |
||
|
(நான் எப்படிப்பட்டவனென்றால்) |
||
| பொய்யனேன் பொய்யனேன் பொய்யனேன் |
– |
மனமொழி மெய்களாகிற மூன்று கரணங்களிலும் பொய்யன்; |
| வந்து நின்றேன் |
– |
(தேவர் திருமுன்பே வெட்க மற்று) வந்துநின்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி கதறி தேவரீர் உடைய கருணையொன்றைய எதிர்பார்திருப்பவனடியேன் என்கிறார்.
மனம், மொழி, மெய், என்கிற முக்கரணங்களிலும் சத்தியம் நிலையாய் இருக்கப்பெற்ற உத்தமாதிகாரியாய் இருக்க முடியாமற்போனாலும் ஏதாவது ஒரு காரணத்திலாவது சத்தியமாய் இருக்கலாம்; அப்படிப்பட்ட நிலைமையும் எனக்கு இல்லை; விஷயாந்தர ப்ராவண்யத்தாலே பொய் தவிர வேறுயில்லாதவனாயிராநின்றேன். ஆயினும் “தேவரீருடைய திருவருள் இருக்குமானால் நமக்கொரு குறைவுமில்லை” என்கிற விச்வாஸமொன்றுமாத்திரம் என்னிடத்தில் உள்ளதாதாலால் அக்கருணையிலுள்ள நசையாலே, வெட்கமும் அச்சமுமற்றுத் திருமுன்பே வந்து நின்றேன் என்கிறார்.
போழ்க்கன் – முறைகேடன், வழிதப்பினவன். ‘போட்கன்’ என்றலுமுண்டு. (ஙங)
English Translation
O Lord, Aranga! I am a vagabond full of vice, I have no integrity. I was caught in the net of coiffured dames. Desirous of your grace, I have come to you now. O False, false me! I stand before you shamelessly.
