(878)
புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்
தலையறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா
சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவனாவான்.
பதவுரை
| கலை |
– |
சாஸ்திரங்களை |
| அற கற்ற மாந்தர் |
– |
நன்றாக ஓதின மனிதர் |
| புலை அறம் ஆகிநின்ற |
– |
நீச தர்மமாயிராநின்ற |
| புத்தொடு சமணம் |
– |
பௌத்தமதம் க்ஷபணமதம் முதலிய |
| எல்லாம் |
– |
எல்லா மதங்களையம் |
| காண்பரோ |
– |
நெஞ்சாலே தான் ஆராய் வார்களோ? |
| கேட்பரோ |
– |
காது கொடுத்துத்தான் கேட்பார்களோ? |
|
(அதுநிற்க) |
||
| தலை அறுப்புண்டும் |
– |
என் தலையானது அறுக்கப்பட்டாலும் |
| சாகேன் |
– |
நான் சாகமாட்டேன்; |
| சத்தியம் |
– |
இது சத்தியம் ; |
| ஐயா |
– |
ஸ்வாமிகளே! |
| காண்மின் |
– |
(ப்ரத்யக்ஷமாகக் காட்டுகிறேன்) பாருங்கள்; |
| சிலையினால் |
– |
வில்லாலே |
| இலங்கைசெற்ற |
– |
இலங்கையை நாசஞ்செய்த |
| தேவனே |
– |
எம்பெருமானே |
| தேவன் ஆவான் |
– |
ஸர்வேச்வரனெனப்படுவான் . |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘தொண்டுபூண்டமுதமுண்ணாத்தொழும்பர்’ என்றும், “புள் கவ்வக்கிடக்கின்றீரே” என்றும் எங்களை இகழ்ந்துரைப்பதிற் பயனென்? ஸம்ஸாரத்தின் இயல்பு இப்படி யிராநின்றது; அன்றியும் “தொண்டுபூண்டு அமுதமுண்போமென்று பார்த்தாலும் எந்தத் தேவனை வணங்கி வழிபடுவதுதென்று தெரியவில்லை; நாங்கள் பரதேவதா நிச்சயம் பண்ண மாட்டாமையாலே ஸம்ஸாரத்திலே ஆழ்கிறோம்; எங்கள் மீது குற்றமென்?” என்று சில ஸம்ஸாரிகள் கூற, அவர்களைத் தெளிவிக்க விரும்பிய ஆழ்வார், தேவதா நிஷ்கர்ஷம் பண்ணித்தருகிறார்.
புத்தொடு – புத்தமென்ற வடசொல் புத்து எனத் திரிந்தது. சமணம் -க்ஷபணகருடைய மதம். கலையறக்கற்ற மாந்தராவார் -கூரத்தாழ்வான் போல்வார் . “ஸ்ருதிஸ்ம்ருதீதிஹாஸங்களில் நிலைநின்றவர்களாய் வேததாத்பர்யம் கைப்பட்டவர்கள்; அவர்களாகிறார்- கூரத்தாழ்வான் போல்வாரிறே”! என்பர் பெரியவாச்சான்பிள்ளை.
“காண்பரோ கேட்பரோதான்” என்றவிடத்தில் ஓர் ஐதிஹ்யம் அருளிச்செய்வர்;- கூரத்தாழ்வான் “இஸ்டஸித்தி” என்கிற ஒரு புறமதச்சுவடி வாசித்துக்கொண்டிருந்த சிலரோடே கூடிச்சிறிது போதுபோக்கி எம்பெருமானார் ஸந்நிதிக்கு விளம்பித்துவர, “ஏன் இத்தனை விளம்பம்?” என்று உடையவர் கேட்டருள, ஆழ்வானும் காரணத்தை உள்ளபடியே உரைக்க, உடையவர் “ ஹா ஹா!‘கலையறக்கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோதான்’ என்ற அருளிச்செயல் என்னாயிற்று?” என்று புநஸ்ஸ்நாநம் செய்வித்தருளி ஸ்ரீபாததூளியும் இடுவித்தருளினாராம்.
தலையறுப்புண்டும் -ஸத்யமான வார்த்தையை நான் சொல்லிக்கொண்டே கழுத்தில் கத்தியை எரிந்தேனாகில் தலை அறுபடமாட்டாது ஸத்யம் ; ஒருகால் தலை அறுப்புண்டாலும் உயிர் போகாதென்பது புநஸ்ஸத்யம் .
சாவேன், சாகேன் என்பன பாடபேதங்கள்.
English Translation
The tenets of all the lowly, heretic cults – will the learned men of Sastras hear or see these? See, O Sirs! Even if you cut my head, I will not die, I swear. The Lord who destroyed Lanka with a bow, alone is Lord of all.
