(816)
நிற்பதும்மொர் வெற்பகத்தி ருப்பும்விண்கி டப்பதும்
நற்பெருந்தி ரைக்கடலுள் நானிலாத முன்னெலாம்
அற்புதன னந்தசயன னாதிபூதன் மாதவன்
நிற்பதும்மி ருப்பதும்கி டப்பதும்என் நெஞ்சுளே.
பதவுரை
| அற்புதன் |
– |
(ஞானம் சக்தி முதலியவற்றால் ஆச்சரியபூதனும் |
| அனந்த சயனன் |
– |
அரவணைமேற் பள்ளி கொள்பவனும் |
| ஆதிபூதன் |
– |
ஜகத்காரணபூதனும் |
| மாதவன் |
– |
ச்ரியாபதியுமான பெருமான் |
| ஓர் வெற்பு அகதது நிற்பதும் வீண் |
– |
விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நின்றருள்வதும் பரமாகாசமென்னும் திருநாட்டிலே |
| இரும்பும் |
– |
வீற்றிருப்பதும் |
| நல் பெருதிரை கடலுள் கிடப்பதும் |
– |
நல்ல பெரிய அலைகளையுடைய திருப்பாற்கடலிலே சாய்ந்தருள்வதும், |
| நான் இலாத முள் எலாம் : |
– |
நான் முறையறியாதே அனத்தாய்க் கிடந்த காலத்திலேயாம்; (இப்பொழுதோவென்றால்) |
|
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சனே. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தம்முடைய திருவுள்ளத்தினின்றும் எம்பெருமான் பேராமல் இங்கேயே ஸ்தாவாப்ரதிஷ்டையாயிருக்கிற இருப்பிலே மிகவும் ஈடுபட்டு, எம்பெருமான் திருவேங்கட மலையில் நிற்பதும் திருநாட்டிலே இருப்பதும் திருப்பாற்கடலிலே கிடப்பதுமெல்லாம் தன்னோடுண்டான முறையை அறியாதே நான் அஸத்கல்பனாயிருந்த காலத்திலேயாம்: நான் முறையறிந்து பரிமாறினபின்பு அவ்வெம்பெருமானுடைய பரிமாற்றமெல்லாம் எனது நெஞ்சினுள்ளே யாய்த்து என்கிறார். (சுடு)
English Translation
His standing on the hill so high, His sitting in the sky above, His sleeping in the ocean-deep, was all before the Self was born. The wonder-Lord the first-cause Lord, the Lord who sleeps eternally, His standing, sitting, reclining — all the acts are in my heart.
