(808)
சங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன்
அங்கமங்க வன்றுசென்ற டர்த்தெறிந்த வாழியான்
கொங்குதங்கு வார்குழல்ம டந்தைமார்கு டைந்தநீர்
பொங்குதண்கு டந்தையுள்கி டந்தபுண்ட ரீகனே.
பதவுரை
| சங்கு தங்கு முன் கை நங்கை |
– |
(நித்ய ஸம்ச்லேஷத்தாலே) சங்கு வளைகள் பொருந்தியிருக்கப்பெற்ற பிராட்டியினுடைய |
| கொங்கை |
– |
திருமுலைத்தடத்திலே |
| தங்கல் உற்றவன் |
– |
விஹாரத்தை விரும்பின படுபாவியினுடைய (இராவணனுடைய) |
| அங்கம் |
– |
சரீரமானது |
| மங்க |
– |
மாளவேணுமென்று |
| அன்று சென்று |
– |
முன்பு (இலங்கைக்கு) எழுந்தருளி |
| அடர்ந்து |
– |
அவ்வூரை ஆக்ரமித்து |
| எறிந்த |
– |
(அவன் தலைகளை) அறுத்தொழித்தவனாய். |
| ஆழியான் |
– |
கடல்போன்ற ச்ரமஹராமன திருமேனியையுடையவனான இராமபிரான் |
| கொஞ்கு தங்குவார் குழல் |
– |
நீண்ட கூந்தலையுடையவர்களான |
| மடந்தையார் |
– |
திவ்யஸுந்தரிகள் |
| குடந்தை |
– |
அவகாஹிக்கப்பெற்ற |
| நீர் |
– |
தீர்த்தமானது |
| பொங்கு |
– |
வ்ருத்தியடைந்திருக்கப்பெற்ற |
| தண் குடந்தையுள் |
– |
குளிர்ந்த திருக்குடந்தையிலே |
| கிடந்த |
– |
பள்ளிகொண்டிராநின்ற |
| புண்டரீகன் |
– |
ஸுந்தராங்கன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “கொங்கைதங்கு வார்குழல் மடந்தைமார்” என்றது லௌகிக ஸ்த்ரீகளையல்ல; “ம.தி.மு.க. மடந்தைய ரேந்தினர்வந்தே” என்று ஆழ்வாரருளிச் செய்தபடி பரமபதத்திலே எதிர்கொண்டழைக்கு மலர்களான திவ்யஸுந்தரிகளைச் சொல்லுகிறது.
English Translation
The Rakshasa King Ravana – He sought the breast of Sita dame!, — was killed in battle by the Lord who hit an arrow with his bow. O Lotus-Lord reclining in the waters of Kudandai-oor, where fragrant long-hair coiffure-dames do bathe and frolic in the stream!
