(808)

(808)

சங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன்

அங்கமங்க வன்றுசென்ற டர்த்தெறிந்த வாழியான்

கொங்குதங்கு வார்குழல்ம டந்தைமார்கு டைந்தநீர்

பொங்குதண்கு டந்தையுள்கி டந்தபுண்ட ரீகனே.

பதவுரை

சங்கு தங்கு முன் கை நங்கை

(நித்ய ஸம்ச்லேஷத்தாலே) சங்கு வளைகள் பொருந்தியிருக்கப்பெற்ற பிராட்டியினுடைய
கொங்கை

திருமுலைத்தடத்திலே
தங்கல் உற்றவன்

விஹாரத்தை விரும்பின படுபாவியினுடைய (இராவணனுடைய)
அங்கம்

சரீரமானது
மங்க

மாளவேணுமென்று
அன்று சென்று

முன்பு (இலங்கைக்கு) எழுந்தருளி
அடர்ந்து

அவ்வூரை ஆக்ரமித்து
எறிந்த

(அவன் தலைகளை) அறுத்தொழித்தவனாய்.
ஆழியான்

கடல்போன்ற ச்ரமஹராமன திருமேனியையுடையவனான இராமபிரான்
கொஞ்கு தங்குவார் குழல்

நீண்ட கூந்தலையுடையவர்களான
மடந்தையார்

திவ்யஸுந்தரிகள்
குடந்தை

அவகாஹிக்கப்பெற்ற
நீர்

தீர்த்தமானது
பொங்கு

வ்ருத்தியடைந்திருக்கப்பெற்ற
தண் குடந்தையுள்

குளிர்ந்த திருக்குடந்தையிலே
கிடந்த

பள்ளிகொண்டிராநின்ற
புண்டரீகன்

ஸுந்தராங்கன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “கொங்கைதங்கு வார்குழல் மடந்தைமார்” என்றது லௌகிக ஸ்த்ரீகளையல்ல; “ம.தி.மு.க. மடந்தைய ரேந்தினர்வந்தே” என்று ஆழ்வாரருளிச் செய்தபடி பரமபதத்திலே எதிர்கொண்டழைக்கு மலர்களான திவ்யஸுந்தரிகளைச் சொல்லுகிறது.

English Translation

The Rakshasa King Ravana – He sought the breast of Sita dame!, — was killed in battle by the Lord who hit an arrow with his bow. O Lotus-Lord reclining in the waters of Kudandai-oor, where fragrant long-hair coiffure-dames do bathe and frolic in the stream!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top