(807)
இலங்கைமன்ன னைந்தொடைந்து பைந்தலைநி லத்துக
கலங்கவன்று சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனே
விலங்குநூலர் வேதநாவர் நீதியான கேள்வியார்
வலங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.
பதவுரை
| அன்று |
– |
முற்காலத்தில் |
| இலங்கை மன்னன் |
– |
இராவணனுடைய |
| ஐந்தொடு ஐந்து |
– |
பத்தாகிய |
| பை தலை |
– |
வலிய தலைகள் |
| நீலத்து உலக |
– |
பூமியிலே விழுந்தொழியவும் |
| கலங்க |
– |
(அவ்வரக்கன் அஞ்சிக்) கலங்கவும் |
| சென்று |
– |
இலங்கையிற் புகுந்து |
| கொன்று |
– |
(அவனைக் கூட்டத்தோடு) கொலை செய்து |
| வென்றி கொண்ட |
– |
விஜயம் பெற்ற |
| வீரனே |
– |
மஹாவீரனே! |
| விலக்கு நூலர் |
– |
உடம்பிலே யஜ்ஞோபவீதத்தையுடையவரும் |
| வேதம் நாவர் |
– |
வேதங்களை நாக்கின் நுனியிலோ உடையரும் |
| நீதி ஆன கேள்வி யார் |
– |
(நல்லாசிரியர் பக்கலிலே) ஸாரமான அர்த்தங்களைக் கேட்டுணர்ந்தவர்களுமான வைதிகர்கள். |
| வலம் கொள |
– |
வழிபாடுகள் செய்யும்படியாக |
| குடந்தையுள் |
– |
திருக்குடந்தையிலே |
| கிடந்த |
– |
திருக்கண் வளர்ந்தருளா நின்ற |
| மாலும் அல்லையே |
– |
ஸர்வேச்வரனும் நீயன்றோ |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாட்டுமுதல் மேல் ஆறு பரசுரங்களாலே, திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகிற படியை அநுபவிக்கிறார்.
English Translation
The five and five the heads of Lank-King-of Rakshasas did roll, when you did wage a battle there and came away with victory. The learned Vedic chanters and the truthful Vedic worshippers, they come around with folded hands around Kudandai temple, O!
