(779)
படைத்தபாரி டந்தளந்த துண்டுமிழ்ந்து பெளவநீர்
படைத்தடைத்த திற்கிடந்து முன்கடைந்த பெற்றியோய்
மிடைத்தமாலி மாலிமான்வி லங்குகால னூர்புக
படைக்கலம் விடுத்தபல்ப டைத்தடக்கை மாயனே.
பதவுரை
| பௌவம் நீர் |
– |
(அண்டங்களுக்குக் காரணமான) ஏகார்ணவத்தை |
| படைத்து |
– |
ஸ்ருஷ்டித்து |
| படைத்த |
– |
(பிறகு, அண்டப்ரஹ்மஸ்ருஷ்டி பூர்வமாக) ஸ்ருஷ்டிக்கப்பட்ட |
| பார் |
– |
பூமியை |
| இடந்து |
– |
(ஸ்ரீவராஹமூர்த்தியாய் அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவித்தெடுத்து |
| அளந்து |
– |
(த்ரிவிக்ரமனாய்) அளந்து |
| உண்டு |
– |
(ப்ரளயகாலத்தில்) திருவயிற்றில் வைத்து நோக்கி |
| உமிழ்ந்து |
– |
(ப்ரளயங்கழிந்த பின்பு) வெளிப்படுத்தியும். |
| பௌவம் நீர் |
– |
(இலங்கைக்கு அழகான) கடலை |
| அடைத்து |
– |
ஸேதுகட்டித் தூர்த்து. |
| முன் அதில் கிடந்து |
– |
முன்பொருகால் அக்கடலிற் கண்வளர்ந்தருளி |
| கடைந்த |
– |
(ஒருகால் அமுதமெடுப்பதற்காக அதனைக்) கடைந்தருளின |
| பெற்றிபோய்! |
– |
(இப்படிப்பட்ட அளவற்ற பெருமைகளையுடையவனே! |
| மிடைத்த |
– |
செருக்கி வந்த |
| மாலி |
– |
மாலி என்றகிற ராக்ஷஸனென்ன |
| விலங்கு மான் மாலி |
– |
அதிக்ஷுத்ரனான ஸுமாலியென்னும் ராக்ஷஸனென்ன இவர்கள் |
| காலன் ஊர் புக |
– |
யமலோகம் போய்ச் சேரும்படியாக |
| படைக்கலம் விடுத்த |
– |
ஆயுதங்களை ப்ரயோகித்தருளின |
| பல் படை தடகை மாயனே! |
– |
பலவகைப்பட்ட திவ்யாயுதங்களை விசாலமான திருக்கையிலே யுடையனான பெருமானே! (உன்னையார் மதிக்கவல்லர்? என்று கீழ்ப்பாட்டின் க்ரியைக் கூட்டிக்கொள்வது) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “மாலிமான்” என்றதை ‘மான் மாலி’ என்று மாற்றி அந்வயித்து ஸுமாலியென்று பொருள்கொள்ளப்பட்டது. ‘ஸு’ என்பதன் ஸ்தாநத்தில் மான் என்றது மஹாந் என்பதன் விகாரம். அன்றி, ‘மாலியவான்’ என்பவனை ‘மாலி மான்’ எனக் கூறிக்கிடப்பதாகவுங் கொள்ளலாம். அங்ஙனுமன்றி, மாலி, மாலி, மான் விங்கு- மாலியென்ன, சுமாலியென்ன, மாரீச மாயாமிருகமென்ன இவர்கள் காலனூர்புக- என்று முரைக்கலாம். விலங்க என்றது மாலி சுமாலிகட்கு அடைமொழியானபோது, அதிக்ஷுத்ரர்களான என்று பொருள் கொள்க. இப்பாட்டில் வினைமுற்று இல்லையாகிலும் கீழ்ப்பாட்டோடேயாவது மேற்பாட்டோடேயாவது கூட்டிக் கொள்ளலாம். (உஅ)
English Translation
You made the Earth; you lifted it, then ate and brought it out again. You made the ocean churned the ocean, lay on it, and made a bridge. You made the angry Mali and Sumali go to Hell below, O Lord with arms of strength and build that wield the mighty five weapons!
