(775)
கங்கைநீர்ப யந்தபாத பங்கயத்தெம் மண்ணலே
அங்கையாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்தினாய்
சிங்கமாய தேவதேவ தேனுலாவு மென்மலர்
மங்கைமன்னி வாழுமார்ப ஆழிமேனி மாயனே.
பதவுரை
| கங்கை நீர் |
– |
கங்கா தீர்த்தத்தை |
| பயந்த |
– |
உண்டாக்கின |
| பாத பங்கயத்து எம் அண்ணலே |
– |
தீருவடித் தாமரையையுடைய எம்பெருமானே! |
| அம் கை |
– |
அழகிய திருக்கையிலே |
| ஆழி சங்கு தண்டும் வில்லும் வாளும் |
– |
பஞ்சாயுதாழ்வாரக்ளை |
| ஏந்தினாய் ! |
– |
ஏந்திக் கொண்டிருப்பவனே! |
| சிங்கம் ஆய |
– |
நரஸிம்ம மூர்த்தியாயவதரித்த |
| தேவ தேவ! |
– |
தேவாதி தேவனே; |
| தென் உலாவும் மெல்மலர் மங்கை |
– |
தேன் பொருந்திய ஸுகுமாரமான தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டி |
| மன்னிவாழும் மார்ப |
– |
(அப்பூவை விட்டு வந்து) பொருந்தி வாழும்படியான திருமார்பையுடையவனே! |
| ஆழி மேனி |
– |
கடல் போன்ற திருமேனியையுடைய |
| மாயனே |
– |
ஆச்சர்ய பூதனே! (என்று ஈடுபடுகிறார்.) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அஹங்காரிகளில் தலைவனான ருத்ரனுக்கும் ஸ்ரீபாத தீர்த்தத்தை தந்தருளி அவனைப் பாவனஞ் செய்தருளினவனன்றோ நீ; ****** என்றபடி- இடர்ப்பட்டு வரும் அடியார்களைத் துயர்நீக்கி ரக்ஷிப்பதில் காலதாமதம் நேரிடாமைக்காகப் பஞ்சாயுதாழ்வார்களை எப்போதும் திருக்கையிலே எந்திக் கொண்டிருப்பவனன்றோ நீ: அந்த ஆச்ரிதரக்ஷண சீக்ஷையை இருஸமய விசேஷத்திலே நரசிங்கமாய்த் தோன்றி வெளியிட்டவனன்றோ நீ; இப்படிப்பட்ட குணங்களுக்குத் தோற்றுப் பெரிய பிராட்டியார் உன்னை விடமாட்டாதே எப்போதும் மார்பில் மன்னியிருக்கின்றா என்றோ; கருங்கடலைக் கண்டவாறே கண்களுங் குளிர்ந்து கைல தாபங்களும் ஆறவதுபோல உன் திருமேனியை ஸேவித்தவாறே என் கண்கள் குளிர்ந்த தாபத்ரயமும் ஆறம்படியா யிராநின்றதே! என்று ஈடுபடுகிறார். (உச)
English Translation
O my Lord with lotus feet, the origin of the Ganga-ji! The mace and conch and dagger and the bow and discus are your Five. O Lord of gods, you came as mighty lion to save the wicked’s son. The lotus dame with bees around does live forever on your chest!
