(774)
வானிறத்தொர் சீயமாய் வளைந்தவாளெ யிற்றவன்
ஊன்நிறத்துகிர்த்தலம ழுத்தினாய் உலாயசீர்
நால்நிறத்த வேதநாவர் நல்லயோகி னால்வணங்கு
பால்நிறக்க டல்கிடந்த பற்பநாப னல்லையே.
பதவுரை
| வால் திறந்து |
– |
வெளுத்த நிறத்தையுடைய |
| ஓர் சீயம் ஆய் |
– |
ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாயவதரித்து |
| வளைந்த வாள் வயிற்றினன் |
– |
வளைந்தும் ஒளிபெற்றுமிருக்கிற பற்களையுடையனான இரணியனுடைய |
| ஊன் நிறத்து |
– |
சரீரத்தில் மர்ம ஸ்தானத்திலே |
| உதிர் தலம் அழுத்தினாய் |
– |
கை நகங்களை அழுத்தினவனே! |
| உலாய சீர் |
– |
உலகமெங்கும் உலாவுகின்ற சீர்மையையுடைய |
| கால் நிறத்த வேதம் |
– |
உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம்,ப்ரசயம் எனகிற நால்வகை ஸ்வரங்களையுடைய வேதங்களை |
| நாவர் |
– |
நாவிலே உடையவர்கள் (ச்ரோத்ரியர்கள்) |
| நல்ல யோதினால் |
– |
விலக்ஷணமான உபாயத்தினாலே |
| வணங்கு |
– |
வணங்குவதற்கு இடமான |
| பால்நிறக் கடல் |
– |
திருப்பாற் கடலிலே |
| கிடந்த |
– |
பள்ளிகொண்டருளின |
| பற்பநரபன் அல்லையே |
– |
பத்மநாபன் நீயேயன்றோ |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ப்ரளயகாலத்து ஆபத்தைப்போக்கி வடதளசாயியாக அமைந்தது மிகவும் அற்புதமான செயல் என்று அதிலே ஈடுபட்டுப் பேசினார் கீழ்ப்பாட்டில். இது அகடிதகட நாஸாமர்த்தியமானது நரசிங்கவுருவங்கொண்ட ஸாமர்த்தியத்தின் முன்னே ஒரு பொருளாக மதிக்கத்தக்கதோ? ****** என்கிறபடியே சரீரத்தில் ஏகதேசத்தை மநுஷ்ய ஸஜாதீயமாக்கியம் ஏகதேசத்தைத் திர்யக் ஸஜுதியமாக்கியும் இப்படி இரண்டு ஜாதியை ஏகவிக்ரஹமாக்கித் துணிலேவந்து தோன்றிய வித்தகம் ஸாமாந்யமானதோ? இதனைப் பரிசோதிக்க வல்லார்? என்கிறார் இப்பாட்டில்.
வால் நிறத்தோர் சீயமாய் = புருஷோத்தமன் தன்ஸ்ரூபத்தை அழித்து ஸிம்ஹஸஜா தீயனது போலவே காளமேகம்போன்ற தன்நிறத்தையும் மாற்ற வெண்ணிறத்தை ஏறிட்டுக்கொள்வதே! என்று ஈடுபடுகிறார். வால் வெண்மை. இனி, வான் நிறம்” எனப் பிரித்து, திவ்யமான தன்மையையுடைய என்று பொருள் கொள்ளுதலும் நன்றே. சீயம் = சிங்கம். “வளைந்தவா ளெயிற்றவன்” என்றதனால் இரணியனுடைய பயங்கரமான வடிவுடைமை தோன்றும். ஊன்நிறம்- சரீரத்தின் மர்மஸ்தாநம்- ஹ்ருதயமென்க. உகிர்த்தலம் என்ற விடத்து, “தலம்” என்றது வார்த்தைப்பாடு. ‘உலாய” என்றது ‘உலாவிய’ என்றபடி. (உங)
English Translation
O Lord who took the form of white lion and caught the wicked king, and tore his chest with claws alone, that the entire world did rave about! O Lord who wins the praise of all and worship of the Vedic seers! O Lord with lotus in the navel, O sleeping-the-Milky-Deep!
