(686)

(686)

உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்

அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்

செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்

எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே

பதவுரை

உம்பரு உலகு

மேலுலகங்களை யெல்லாம்
ஒரு குடை கீழ்

ஒரு கொற்றக் குடையின் நிழலிலே
ஆண்டு

அரசாண்டு
உருப்பசி தன்

ஊர்வசியினுடைய
அம்

அழகிய
பொன் கலை அல் குல்

பீதாம்பர மணிந்த அல்குலை
பெற்றாலும்

அடையப் பெறினும்
ஆதரியேன்

(அதனை) விரும்பமாட்டேன்;
செம் பவளம் வாயான்

சிவந்த பவழம் போன்ற வாயையுடையனான
எம்பெருமான்

எனது அப்பனுடைய
திருவேங்கடம் என்னும் பொன்மலை மேல்

திருவேங்கட மென்ற பெயரையுடைய அழகிய திருமலையின் மேல்
ஏதேனும் ஆவேன்

ஏதேனுமொரு பதார்த்தமாகப் பிறக்கக் கடவேன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் படியாகக் கிடக்க வேணுமென்று பிரார்த்தித்தது எம்பெருமானுடைய பவளவாய் காண்பதற்காக; அப்புருஷார்த்தம் கிடையாதொழியினு மொழியும்;  ஏனெனில்; திருமலையில் ஸந்நிதிக்குள் கருங்கல் படியிருப்பது திருவேங்கட முடையானுடைய செல்வத்திற்குத் தகாது என்று மஹா ப்ரபுக்கள் வந்து அப்படியை ஸ்வர்ணகவசத்தால் ஆவரிக்கக் கூடும்.  அப்போது நாம் அப்பன்  திருமுகமண்டல ஸேவையை இழந்தோமாவோம்; ஆகையால் படியாய்க் கிடப்பதும் பாங்கல்ல என்று அறுதியிட்டார்.  பின்னை எந்தப் பிறவியைப் பிரார்த்திக்கலாமென்று யோசித்தார்.  கீழ் நிகழ்ந்த மாதிரி ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு அநுபபத்தி தோன்றிக் கொண்டேயிருந்தது.  கடைசியாக ஒரு பிறவியையும் தாமாக வேண்டிக் கொள்ள விரும்பாதவராய் “ எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே” என்கிறார்.

English Translation

Even if I am offered the gold-girdled hips of Urvasi and the parasoled kingship over celestials, I will not change my mind. Yet I will settle for just anything, if it be on Venkatam hills where my Lord resides.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top