(683)
வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே
பதவுரை
| வான் ஆளும் மா மதி போல் |
– |
ஆகாயத்தைத் தனக்கு இடமாகக் கொண்டு விளங்குகின்ற பூரண சந்திரன் போன்ற |
| வெள் குடை கீழ் |
– |
ஒற்றை வெண்கொற்றக் குடையின் கீழ் |
| மன்னவர் தம் சோன் ஆகி வீற்றிருந்து |
– |
ராஜாதி ராஜனாய்ப் பெருமை தோன்ற இருந்து |
| கொண்டாடும் |
– |
(அனைவராலும்) கொண்டாடப் படுவதற்குக் காரணமான |
| செல்வு |
– |
செல்வத்தை |
| அறியேன் |
– |
(யான் ஒரு பொருளாக) மதிக்கமாட்டேன்; |
| தேன் ஆர் பூ சோலை திருவேங்கடம் மலை மேல் |
– |
தேன் மிக்க மலர்களுள்ள சோலைகளையுடைய திருமலையின் மேல் |
| கான் ஆறு ஆய் பாயும் |
– |
ஒரு கானாறாயப் பெருகும் படியான |
| கருத்து உடையேன் ஆவேன் |
– |
அத்ய வஸாயத்தை உடையவனாகின்றேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில், பொற்குவடாக வேணுமென்று பாரித்தார்; சிறிது யோசித்தவாறே, அதுதன்னிலும் ஓர் அநுபபத்தி தோன்றிற்று: அதாவது – புதிதாகத் தேவாலயங்கள் நாட்டுபவர்கள் சிலாமியமாக மூலவிக்ரகம் ஏறியருளப் பண்ணுவதற்காக மலை முகடுகளினின்று பெரும் பெரும் பாறைகளை உடைத்துக்கொண்டு போகிற வழக்கம் உளதாதலால் அதுவும் ஏற்றதல்லவென்று தோன்றிற்று. தோன்றவே, அங்ஙனமின்றி, ஒருவராலும் பெயர்த்துக்கொண்டு போகக் கூடாததான கானாறாகப் பிறக்க வேணுமென்று அபேஷிக்கிறார் இதில்.
English Translation
I do not wish to rule over kings as a monarch protected by Moon-like parasols. I only wish to run like a wild stream in Venkatam, amid groves of nectar-dripping flowers.
