(682)

(682)

மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்

அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்

தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்

அன்னனைய பொற்குவடா மருந்தவத்த னாவேனே

பதவுரை

மின் அனைய நுண் இடையார்

மின்னல் போல் ஸூக்ஷ்மமான இடையே உடையவர்களாகிய
உருப்பசியும் மேனகையும்

அன்னவர் தம்

ஊர்வசியும் மேனகையும்

போலழகியவர்களான ஸ்த்ரீகளின்

பாடலொடும் ஆடல் அவை

பாட்டும் ஆட்டமுமாகிய அவற்றை
ஆதரியேன்

யான் விரும்பவில்லை
வண்டு இனங்கள்

வண்டுகளின் கூட்டம்
தென்ன எனபண்பாடும்

” தென தென ” என்று ஆளத்தி வைத்து இசைபாடப் பெற்ற
வேங்கடத்துள்

திருமலையிலே
அன்னனைய பொன் குவடு ஆம்

அப்படிப்பட்ட பொன்மயமான சிகரமாவதற்கு உரிய
அரு தவத்தன் ஆவேன்

அருமையான தவத்தை யுடையவனாகக் கடவேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “தம்பகமாய் நிற்குந் தவமுடையேனாவேன்” என்றவர் சிறிது யோசித்த வளவில், அரசாங்கத்தார், மலையிலுள்ள செடி செட்டுகளை அடிக்கடி  சோதிப்பவராதலால் திடீரென்று அவர்கள் தம்பகத்தைக் களைத்தெறிந்திடக் கூடுமெனவும், அது தானே விரைவில் தீந் தொழியக்கூடுமெனவும் நினைத்து, அங்ஙனன்றி என்றும் ஒரு படியா யிருக்கும்படி அத்திருமலையில் ஒரு பாகமாகக் கடவேனென்று அபேக்ஷிக்கின்றார்.  முன்னிரண்டடிகளால்  தேவலோக போகத்தில் தமக்கு  எள்ளளவும் நசை யில்லாமையை வெளியிட்டார்.

English Translation

I do not crave for the song and dance performances of Urvasis and Menakas of lightning-thin waists. I wish to be a golden peak on Venkatam hill, and enjoy the dance of bumble-bees that hum Tena-Tena on Panns.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top