(678)
ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே
பதவுரை
| ஆனாத செல் வத்து |
– |
அழியாத (யௌவநமாகிய) ஸம்பத்தையுடைய |
| அரம்பையர்கள் |
– |
அப்ஸரஸ் ஸ்த்ரீகள் |
| தன் சூழ |
– |
தன்னைச் சூழ்ந்து நிற்க |
| வான் ஆளும் செல்வமும் |
– |
மேலுலகத்தை அரசாளுகின்ற ஐச்வர்யத்தையும் |
| மண் அரசும் |
– |
இப்பூலோகத்தை அரசாளும் ஆட்சியையும் |
| யான் வேண்டேன் |
– |
(வருத்தமின்றிக் கிடைப்பதாயினும்) யான் விரும்ப மாட்டேன் |
| தேன் ஆர் பூ சோலை |
– |
தேன்மிக்க மலர்களுள்ள சோலைகளையுடைய |
| திருவேங்கடம் |
– |
திருவேங்கட மலையிலிருக்கின்ற |
| சுனையில் |
– |
சுனைகளிலே |
| மீன் ஆய் பிறக்கும் |
– |
ஒரு மீனாகப் பிறக்கத்தக்க |
| விதி |
– |
வாக்கியத்தை |
| உடையேன் ஆவேன் |
– |
உடையவனாகக் கடவேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இந்திரன் முதலிய தேவாதி தேவர்களின் பதவிகளும் இவ்வுலகத்து அரசாட்சியுமாகிய இரண்டு ஒருங்கு கிடைத்தாலும் வேண்டா என்று விலக்குகின்றார். அரம்பையர்கள் – ரம்பை முதலியோர். இரண்டாமடியிலுள்ள சொற்போக்கினால், இவை எனக்கு ஏககாலத்திலே கிடைத்தாலும் வேண்டா வென்பதும், இவற்றை யான் வேண்டாமைக்குக் காரணம் இவை கிடையாமையன்று, இவற்றில் எனக்கு விருப்பமில்லாமையே என்பதும் தோன்றும். முக்தியின் ம்ஹாநந்தத்தை நோக்குங்கால், இவ்விரண்டும் சிற்றின்பமேயாதலும், சாச்வதமான அந்தஸ்தாநத்தை நோக்குங்கள் இவை அழிவுள்ளனவேயாதலும், ஆத்மாவைக்கரும பந்தங்களினின்று விடுவிக்கின்ற அவ்வீட்டு நிலை போலவன்றி இவை பந்தங்களை உறுதிப்படுத்துதலில் பொன்விலங்கும் இருப்புவிலங்கும் போலத் தம்முள் ஒப்பனவே யாதலும் கருதத்தக்கன. தேன் ஆர் – வண்டுகள் ஆரவாரிக்கின்ற என்றுமாம். சுனை – மலையில் நீரூற்றுள்ள குணம்.
கீழ் ” குருகாய்ப் பிறப்பேனே ” என்றவர், அதற்கு இறகுகள் இருப்பதால் அது அத்திருமலையைவிட்டுப் பறந்து வேற்றிடத்திற்குச் சென்றிடக்கூடுமெனக் கருதி, அங்ஙனமன்றி அத்திருமலையிலேயே பிறப்பு வாழ்ச்சி இறப்புகளையுடைய மீனாய்ப் பிறப்பேனாகவென்று இப்பாட்டில் வேண்டுகின்றார். குருகாய்ப் பிறத்தலோடு அதற்கு இரையாகின்ற மீனாய்ப் பிறத்தலோடு இவர்க்கு வாசியில்லை, திருமலையில் ஏதேனும் ஒரு ஜன்மத்தையே அபேக்ஷிப்பவராதலால், ” எம் பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே ” என்பர் பின்னும்.
English Translation
I do not cherish this life of wealth, glory and power, surrounded by dancing-girls decked in gold and finery. In the cool glens of Venkatam where flowers spill nectar, may I be born as a little fish!
