(623)
வண்ணம் திரிவும் மனங்குழைவும் மானமி லாமையும் வாய்வெளுப்பும்
உண்ண லுறாமையு முள்மெலிவும் ஓதநீர் வண்ணனென் பானொருவன்
தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு சூட்டத் தணியும் பிலம்பன்றன்னைப்
பண்ணழி யப்பல தேவன்வென்ற பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின்
பதவுரை
| வண்ணம் திரிவும் |
– |
(என்னுடைய) மேனிநிறத்தின் மாறுபாடும் |
| மனம்குழைவும் |
– |
மனத்தளர்ச்சியும் |
| உண்ணல் உறாமையும் |
– |
ஆஹாரம் வேண்டியிராமையுமு |
| உள் மெலிவும் |
– |
அறிவு சுருங்கிப்போனதுமாகிய இவையெல்லாம் (எப்போது தணியுமென்றால்) |
| ஓதம் நீர் வண்ணன் என்பான் ஒருவன் |
– |
கடல் வண்ண னென்று ப்ரஸித்தனாய் விலக்ஷணனான கண்ணபிரானுடைய |
| தண் அம்துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட |
– |
குளிர்ந்து அழகிய திருத்துழாய்மாலையைக் கொண்டுவந்து சூட்டுமளவில் |
| தணியும் |
– |
நீங்கும், (அத்திருத்துழாய் மாலை உங்களால் இங்கே கொண்டுவந்து கொடுக்க முடியாதாகில்) |
| மானம் இலாமையும் |
– |
மாணங் கெட்டுப்போனபடியும் |
| வாய் வெளுப்பும் |
– |
வாய்வெளுத்துப் போனபடியும் |
| பலதேவன் |
– |
பலராமன் |
| பிலம்பன் தன்னை |
– |
ப்ரலம்பாஸுரனை |
| பண் அழிய |
– |
ஸந்தி பந்தங்கள் உருக்குலையும்படி, |
| வென்ற |
– |
கொன்று முடித்த இடமாகிய பாண்டிவடத்து |
|
பாண்டீரமென்னும் ஆலமரத்தினருகில் |
||
| என்னை உய்த்துடுமின் |
– |
என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- புதிதாகவந்த சிலபெண்பிள்ளைகள் ஆண்டாளுடைய அதிமாத்ரமான வைவர்ணியம் முதலியவற்றை உற்றுநோக்கி ‘அம்மா! உனக்கு இந்தவிகாரங்களெல்லாம் என்றைக்குத்தீரும்? என்னசெய்தால் தீரும்? பலவகைப்பட்டவிகாரங்களை அடைந்திட்டாமே, என்னசெய்தாலும் இந்தவிகாரங்கள் தீரமாட்டாதவை போலிருக்கின்றனவே!, உனக்கேற்ப ஏதாகிலுமுபாயம் தெரிந்தால் சொல்லிகாண்‘ என்ன, ‘கண்ணபிரானுடைய திருத்துழாய்மாலையைக் கொண்டுவந்து சூட்டினால் இவ்விகாரங்களெல்லாம் தணிந்துவிடும் என்று இவள் சொல்ல, அவனுடைய திருத்துழாய்மாலை எங்கள் கையில் எளிதாகக் கிடைக்குமோ? அதனை நாங்கள் எங்ஙனே கொண்டு வரக்கடவோம்? என்று அப்பெண்கள் திகைத்து நிற்க, அஃது அரிதாகில் என்னை அப்பெருமானது திருவடிவாரத்திலேகொண்டு போய்ச் சேர்த்துவிடுங்கள்‘ என்கிறாள்.
பலராமனாற்செய்யப்பட்ட ப்ரலம்பாஸுரவத்தைக் கண்ணபிரான்றானே செய்தருளியதாகக் கூறுதலுமுண்டு, தேனுகன் பிலம்பன் காளியனென்றும் “கருளுடைய பொழில்மருதுங் கதக்களிறும் பிலம்பனையுங் கடியமாவும்“ என்ற பெரியாழ்வார் திருமொழிகாண்க. உண்மையில் பலராமன் செய்த இச்செய்தியைக் கண்ணபிரான் செய்ததாகக் கூறுதல் ஒற்றுமை நயம் பற்றியாம். ஸ்ரீராமாவதாரத்தில் இளையபெருமாள் செய்த சூர்ப்பணகா பங்கத்தை ஸ்ரீராமபிரான்தானே செய்ததாக ஆழ்வார்கள் அநுஸந்திப்பதும் இங்ஙனமேயாம். “சூர்ப்பணகாவைச் செவியொடுமூக்கு அவளார்க்க வரிந்தானைப்பாடிப்பற அயோத்திக்கரசனைப்பாடிப்பற“ இத்யாதிகள் காண்க.
“இளையபெருமாள் இந்த்ரஜித்வதம்பண்ண, அந்தவெற்றி பெருமாளுடைய தானாப்போலேயாய்த்து இங்கும், நம்பிமூத்தபிரானுடைய வெற்றியும் க்ருஷ்ணனதாயிருந்ததிறே. அவன் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் பண்ணிமாலையிடும் போது அவன் தனியேநில்லாமே நானும் ஒக்கநின்று மாலையிடும்படியாக என்னை அங்கேகொடுபோய்ப் பொகடுங்கோள்“ என்றவியாக்கியான ஸ்ரீஸூக்திநோக்கத்தக்கது. ப்ரலம்ப என்ற வடசொல் பிலம்பன் எனத்திரிந்தது, பாண்டீரவடிமென்ற வடசொல் பாண்டிவடமெனத்திரிந்தது. யமுனையாற்றின் ஸமீபத்தில் பெரிய ஆலமரமொன்று உள்ளவிடத்திற்குப் பாண்டிவடமென்று பெயர் ப்ரலம்பவதம் நடந்த இடமிது.
English Translation
My paleness, depression, insensibility, white lips, loss of appetite, sleeplessness and sulkiness-all these will disappear, when the Tulasi garland worn by the Lord is wreathed on me. So take me to Bhandiravata, where his brother vanquished Pralamba by parting the thighs of the demon.
