(565)

(565)

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து

மங்கல வீதிவ லம்செய்து மணநீர்

அங்கவ னோடுமு டஞ்சென்றங் கானைமேல்

மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

பதவுரை

குங்குமம்

குங்குமக்குழம்பை
அப்பி

உடம்பெல்லாம்பூசி
குளிர்சாந்தம்

குளிர்ந்தசந்தனத்தை
மட்டித்து

கனக்கத்தடவி
ஆனைமேல்

மத்தகஜத்தின்மேலே
அவனோடும் உடன் சென்று

அக்கண்ணபிரானோடு கூடியிருந்து
மங்கலம் வீதி

(விவாஹநிமித்தமான) அலங்காரங்கள் விளங்குகின்ற வீதிகளிலே
வலம் செய்து

ஊர்வலம் வந்து
மணம் நீர்

வஸந்த ஜலத்தினால்
மஞ்சனம் ஆட்ட

(எங்க ளிருவரையும்) திருமஞசனம் பண்ணுவதாக

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரானும் தானுமாக அக்நிஸமீபத்திலே சிலநாழிகை இருக்கநேர்ந்தமையால் அப்போதுண்டான வெப்பம் பொறுக்கமுடியாததாக, அதற்குப் பரிஹாரமாகக் குளிர்ந்த குங்குமக்குழம்பையும் ந்தனச்சேற்றையும் திருமேனியெங்கும் அப்பி இந்தத் திருவீதிவலம்வந்து, பிறகு வஸந்தஜலத்திலே மஞ்சனமாட்டப் பெற்றதாகக் கனாக்கண்டேனென்கிறாள். பச்சைக் கல்யாணத்தன்றிரவு நடைபெறும் வஸந்தஸ்நாநம் இப்பாட்டிற் கூறப்பட்டதென்க.

English Translation

I had a dream O sister! They smeared me with red powder and sandal paste, and took us around the town on an elephant, then bathed us both with scented water.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top