(561)

(561)

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பிம துசூதன் வந்துஎன்னைக்

கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்

பதவுரை

மத்தளம் கொட்ட

மத்தளங்கள் அடிக்கவும்
வரி சங்கள் நின்று ஊத

ரேகைகளையுட்டைய சங்குகளை ஊதவும்
மைத்துனன் நம்பி மதுசூரன்

மைத்துனமைமுறையையுடையனாய் பூர்ணனான கண்ணபிரான்
முத்து உடைதாமம் நிரைதாழ்ந்த பந்தல் கிழ் வந்து

முத்துக்களையுடைய மாலைத்திரள்கள் தொங்கவிடப்பெற்று பந்தலின்கீழேவந்து
என்னை கைத்தலம் பற்ற

என்னைப் பாணிக்ரஹணம் செய்தருள

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மருதங்கம் முதலிய பலவகைவாத்தியங்கள் அடிக்கவும் சங்குகளூதவும் இப்படிமங்களவாத்யகோஷம் முழங்காநிற்க, கண்ணபிரான் முத்துப்பந்தலின்கீழே எழுந்தருளிப் பரணிக்ரஹணம் பண்ணியருளக் கனாக்கண்டேனென்கிறாள்.

“நின்றூத“ என்றவிடத்து நின்று என்றது வார்த்தைப்பாடு. தைதுனன் – அத்தைமைந்தன். மாமன் மகளை மணக்கும்முறையைபற்றி நப்பின்னைப் பிராட்டிக்குக் கண்ணபிரான் தைதுன்னாதலால் ஆண்டாளும் அந்தஸம்பந்தத்தை ஆசைப்பட்டு “மைத்துனன் நம்பி“ என்கிறாளென்ப மதுசூதன் – மது என்ற அசுரனைக் கொன்றவன், விரோதிநிரஸநத்தில் வல்லவன் என்றபடி. இங்கே வயாக்யாநஸ்ரீஸூக்தி – (மதுசூதன்) மற்றுமு மைத்துனமைமுறையுண்டென்று ஆரேனும் வந்து கைப்பிடிக்கப்பார்க்கில் அவர்களையழியச்செய்து தானே ஸ்வீகரிக்கவல்லவனாய்த்து, தன்னுடைமையைப் பிறர் ‘என்னது‘ என்னும்போது அவர்களையழியச்செய்து கைக்கொள்ளவல்லனாய்த்து.

English Translation

I had a dream O sister! Drums beat and conches blew under a canopy of pearls on strings. Our Lord and cousin Madhusudana held my hand in his.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top