(559)
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
பதவுரை
| பாப்பனர் சிட்டாகள் பல்லார் |
– |
சிஷ்டர்களான பல ப்ராஹ்மணர்கள் |
| நால் திசை |
– |
நான்கு திசைகளிலுமிருந்து |
| தீர்த்தம் |
– |
தீர்த்தங்களை |
| கொணர்ந்து |
– |
கொண்டுவந்து |
| நனி நல்கி |
– |
நன்றாகத்தெளிந்து |
| எடுத்து ஏத்தி |
– |
உச்சஸ்வரமாக வெடுத்து மங்களா சாஸநம்பண்ணி |
| பூபுனை கண்ணி புனிதனோடு |
– |
(பலவகைப்) புஷ்பங்கள் புனைந்தமாலையையுடையவனாய்ப் பரமபாவநனான கண்ணா பிரானோடு |
| என்றன்னை |
– |
என்னை (இணைத்து) |
| காப்பு நாண் கட்ட |
– |
கங்கணங்கட்ட |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சக்ரவர்த்தித் திருமகனாருடைய திருவபிஷேக மஹோத்ஸவத்திற்காக ஸ்ரீவாநரவீரர்கள் நாலுஸமுத்ரத்திலுமுள்ள தீர்த்தங்களையுங்கொணர்ந்தாப்போல என்னுடைய கல்யாணமஹோத்ஸவத்திற்காக வைதிகஸார்வபௌமர்களான பல அந்தணர்கள் நாற்றிசைகளினின்றும் நாநாவகைப் புண்யதீர்த்தங்களைக் கொண்டு வந்து, ஆயுஸ்ஸு முதலான நன்மைகளெல்லாமுண்டாவதற்காக அந்தத் தீர்த்தங்களாலே தம்பதிகளாகிய எங்களைப் பலகாலும் ப்ரோக்ஷித்து, “***“ (ஆயுரரசாஸ்தே, ஸுப்ரஜாஸ்த்வமாசாஸ்தே) இத்யாதி வேதவாக்கியங்களை உச்சைஸ்ஸ்வரமாக எடுத்து ஓதி ஆஸீர்வாதங்கள் பண்ணிக் கண்ணாபிரானோடு என்னை இணைத்துக் கங்கண நூல்கட்டும் நிலைமையைக் கனவில் கண்டேனென்கிறாள்.
நனி – மிகுதியை உணர்த்தும் உரிச்சொல், மிகவும் என்றபடி நல்கு நல் – கொடுத்தல், இங்கு, ப்ரோக்ஷணம்செய்தல் ப்ராஹ்மண, என்ற வடசொல் பாப்பனன் எனத் திரிந்தது, பாப்பனர் – சிட்டர், பாப்பனச்சிட்டர், ப்ராஹ்மணயோநியிற் பிறப்புமாத்திரமின்றியே வேதங்களை நன்றாக ஓதி ஆசாரவ்யஹாரங்களில் ஒன்றுங்குறையாதிப்பவர்கள். “பல்லரண் டெடுத்தேத்தி“ என்பது அதுநிகர்களின் பாடம், வியாக்கியானத்தில் “ மங்களாசாஸநம்பண்ணி“ என்றருளிச் செய்திருப்பதைக்கண்டு பல்லாண்டு என்றபாடத்தைக் கற்பித்தனர்போலும், “பல்லார் எடுத்து ஏத்தி“ என்றபாடத்திற்கே வியாக்கியானம் நன்கு பொருந்தியிருக்குமாற்றைக் காண்மின்.
பூப்புனைகண்ணி – கல்யாணப்பெண்ணுக்கு உயர்ந்த சேலையாலும் சிறந்த பூஷ்ணங்களாலும் அலங்காரம் பண்ணினால், கலியாணப்பிள்ளைக்கு அவையெல்லாம் வேண்டாதே ஒரு புஷ்பஸரத்தாலே அலங்காரம் அமைந்தபடி புனிதன் – பரிசுத்தன் என்றபடி, ஸ்நாநம்பண்ணிக் கையும் பவித்திரமுமாய் வைதிகவேஷம் பூண்டு ஒருவர்மேலும் படாமல் மிக்க ஆசாரசீலனாயிருக்கு மிருப்புத் தோற்றப் புனிதம் என்கிறாள். ஆசாரம் சிறிதுகுறைந்தாலும் பெரியாழ்வார்பெண்பிள்ளையைக் கொடுக்கமாட்டார்களென்று கண்ணபிரான் மிக்க ஆசாரங்கொண்டாடுகிறபடி. புனிதனோடு என்றன்னை – புனிதனுக்கும் எனக்கும் என்றபடி. காப்புநாண் – மங்களார்த்தமான கங்கணஸூத்ரம். காப்புநாண்கட்டுகை புரோஹிதருடைய காரியமென்ப.
English Translation
I had a dream O sister! Scores of sages and seers chanted on a high key; they anointed us with waters from the four Quarters, and then tied the talisman-thread on our wrists.
