(551)

(551)

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் புணர்வதோ ராசயி னால்என்

கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் தாவியை யாகுலஞ் செய்யும்

அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு ஆழியும் சங்குமொண் தண்டும்

தங்கிய கையவ னைவரக் கூவில்நீ சாலத் தருமம் பெறுதி

பதவுரை

அம் குயிலே!

அழகிய குயிலே!
பொங்கிய பால் கடல்

அலையெறிவையுடைய திருப்பாற்கடலில்
பள்ளி கொள்வானை

பள்ளி கொண்டருளும் எம்பெருமானோடே
புணர்வது

ஓர் ஆசையினால் ஸம்ச்லேஷிக்க வேணுமென்று உண்டான ஆசையினால்
என்

கொங்கை எனது முலைகள்
கிளர்ந்து  பருத்து

மிக்க உத்ஸாஹங் கொண்டு

குதுகலித்து

ஆவியை

எனது உயிரை
குமைத்து ஆகுலம் செய்யும்

உருக்கி வியாகுலப் படுத்தா நின்றன’
மறைந்து உறவு

– என் கண்ணுக்குப் புலப்படாமல் நீ மறைந்திருப்பதனால்
உனக்கு என்ன

உனக்கு என்ன புருஷார்த்தம்?
ஒண் ஆழியும் சங்கும் தண்டும் தங்கிய கையவனை வர

திருவாழி திருச்சங்கும் ஸ்ரீ கதையும் பொருந்திய திருக்கைகளுடைய பெருமாள் இங்கே வரும்படி
நீ கூவில்

நீ கூவுவாயாகில்
சால

மிகவும்
தருமம் பெறுதி –

தர்மம் செய்தாயா வாய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பரமபதத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து பள்ளி கொண்டிரா நின்ற பெருமானைப் புணரவேணுமென்ற அபிநிவேசத்தினால் என் கொங்கை களானவை காலவிளம்பம் பொறுத்திருக்கமாட்டாத தன்மையினால் விம்மிவளர்ந்து, அவ்வளவிலும் அவன் ஓடிவந்து அணைக்காணாமையினாலே ‘யாம் உன்மார்விலேவந்து முளைத்தபடியாலன்றோ எமக்கு இந்தக்கஷ்டம் விளைந்தது’ உன்னுடைய தெளர்ப்பாக்யமானது எங்கள் மேலும் ஏறிப்பாய்ந்து எம்பெருமான் எங்களையும் உபேஷிக்கும்படியாயிற்று’ என்று சொல்லிக் கொண்டு அவை என்னைப்புடைக்கிற புடையை என்சொல்வேன்? என்று ஆண்டாள் கூக்குரலிட்டுக் கூறியதைக் கேட்ட அச்சோலைக்குயிலானது ‘இப்போது நாம் இவளுக்கு முகங்கொடுத்தால் நம்மை இவள் வெறுமனே விடமாட்டாள்;. “என்செய்யதாமரைக்கட் பெருமானார்க்கென்தூரிதாய், என் செய்யுமுரைத்தக்கால் இனக்குயில்காள்!” (திருவாய்மொழி க-ச-உ) என்றாள்போல இவளும் நம்மைத் தூரிதுபோகவேண்டிக் காலையொடிக்கக் கருதுவள்’ இந்த வெய்யிலிலும் கானலிலும் ஓடுவதற்கு நம்மாலாகாது’ அதுதன்னிலும் திருப்பாற்கடலெம்பெருமான் மீது இவளுக்கு ஆசையாம்’ அங்கே ஓட ஆராலாகும்? ஆகையாலே இவளுக்கு நாம் முகங்காட்டாமல் தலைமறைந்திருப்பதே தகுதி’ என்று நினைத்து முகத்தையுங்காட்டாமல் குரலையும் தெரிவியாமல் பதுங்கிக் கிடந்தது’ அங்ஙனமிருந்த அக்குயிலின் கருத்தைத் தெரிந்து கொண்ட ஆண்டாள் “அம் குயிலே!” என்று விளித்தான்’ (அழகிய குயிலே! என்றபடி) நீ மற்றகுயில்களைப் போலேயிருந்தாயாகில் உன்னைச்ரமப்படுத்த நினைத்தாலும் நினைப்பேன்’ அழகியகுயிலன்றோநீ’ உன் அழகைக் கண்டிருக்கிறநான் அவ்வழகுக்கு ஒருவாட்டம் பிறக்கும்படி உன்னைச்ரமப்படுத்த நினைப்பேனா? நீ எங்கும் தூரிது செல்லவேண்டா’ நீ இருந்த விடத்திலிருந்து கொண்டே, அப்பெருமான் இங்கேவரும்படி கூவினாயாகில் இதுவே மஹோபகாரமாம்’ எனக்குமாத்திரம் நன்மையன்று’ நீயும் ஒருவாய்ச்சொல்லாலே பெரிய தருமம் நடத்தினாயாவாய்; ‘நாம் கூவினால் அவ்வெம்பெருமான் ஓடிவரக் காத்திருக்கிறானோ; என்று நினையாதே; “நம்மேல்வினைகடிவான் எப்போதும் கைகழலாநேமியான்” என்றும் “(பாது ப்ரணதரக்ஷாயாம் விளம்பமஸஹந்நிவ, ஸதா பஞ்சாயுதீம் பிப்ரத் ஸந: ஸ்ரீரங்கநாயக: ஸ்ரீ ஸ்ரீரங்கராஜஸ்தவனம்.)” என்றும் சொல்லியிருக்கிறபடி என்னைப் போன்ற ஆர்த்தர்கட்க விரைவாகவந்து காரியஞ் செய்வதற்காக அவன் திவ்யாயுதங்களை க்ஷணகாலமும் கைவிடாமல் ஏந்திக் கொண்டிருப்பது உனக்குத் தெரியாதா? ஏற்கனவே இங்கு வந்து காரியஞ்செய்வதில் ஆதரமுடையவனான அப்பெருமான் உன் கூவுதல் கேட்டபின்பும் வாராதே நிற்பனோ? அரைகுலையத்தலை குலைய ஆனைக்கு வந்து உதவினாற் போலே எனக்கும் உதவ ஓடிவருவன்காண்; ஆகையாலே நீ கூவு என்கிறாள்.

பொங்கிய பாற்கடல் ஸ்ரீ  பாற்கடலின் பொங்குதலுக்கு இரண்டு ஹேதுக்களை ரஸோக்தியாக அருளிச்செய்வர் பெரியவாச்சான்பிள்ளை; (க) ஸாமாந்யனான ஒருசந்திரனைக் கண்டாலே கடல் பொங்கக் காண்கிறோம்; சிறந்த சந்திரர்கள் பதின்மரைக் கண்டால் பொங்குதலுக்கு அளவுண்டோ? திருப்பாற்கடல் பத்து சந்திரர்களைக் கண்டதோ வென்னில்; ஆம்;  (த்வத்பாதாப்ஜே ப்ரியமக! நகச்சத்மநாச்ரித்ய நித்யம் ஸத்வ்ருத்தோபூத் ஸசதகுண: புஷ்கலோ நிஷ்கலங்க :- வரதராஜஸ்தவம்) என்று – ‘எம்பெருமானுடைய திருவடிகளிலுள்ள பத்துத்திருவிரல்களிலும் உருண்டை வடிவமாய் நகம்போல விளங்குகின்றவை நகங்களல்ல’ சில குற்றங்குறைகளோடு கூடியிருந்த சந்திரன் பெருமாள் திருவடியை ஆச்ரயித்து அக்குற்றங்குறைகள் தீர்ந்து பத்து வடிவம் பெற்று அத்திருவடிகளை விடாதே கிடக்கிறான்; அவையே நகங்களாகத் தோற்றுகின்றன; என்று அருளிச்செய்திருக்கையாலே அந்தப் பத்து சந்திரர்களையும் பாற்கடல் கண்டால் பொங்காதிருக்குமோ? (உ) பொங்குதலுக்கு மற்றொரு ஹேது என்னென்னில், ????????????? (சந்த்ரமா மநஸோஜாத :- புருஷஸூக்தம்) என்றபடி சந்திரனானவன் எம்பெருமானுடைய மநஸ்ஸில் நின்றும் தோன்றியவன்; அச்சந்திரனுக்கு எம்பெருமான் தனது திருவுள்ளத்திலுள்ள தண்ணளியிலே ஸ்வல்பபாகத்தை ஊட்டினமாத்திரமேயுள்ளது; அப்படிப்பட்ட சந்திரனைக் கண்டே கடல் பொங்கிற்றாகில், ஸாக்ஷாத் அவ்வெம்பெருமான் தானே வந்துபடுகாடு கிடக்கக்கண்டால் பொங்குதலுக்கு அளவுண்டோ?

என்கொங்கை கிளர்ந்து =  ஆசை அளவற்றிருக்கச்செய்தேயும் நமது பெண்மைக்குக் குறைபாடு நேரவொண்ணாதென்று நான் அடங்கியிருந்தாலும் என்கொய்கைக்கு அத்தகைய அடக்கம் இல்லையே! என்கிறாள் போலும். கொங்கை குதுகலித்துக் கிளர்ந்து ஸ்ரீ ‘நம்முடைய கஷ்டதசையைக் கண்டறிந்து எம்பெருமான் பதறிவருகிறான்’ என்றெண்ணின கொங்கைகளானவை மஹாப்ரபுக்களை எதிர்கொள்ளப் புறப்படுவாரைப்போலே குதூரிஹலமாய்க் கிளர்கின்றமை காணீரென்கிறாள். போலும். குதுகலித்து “குதூஹலம்” என்ற வடசொல்லை ஒரு வினைப்பகுதியாகக் கொண்டு அதன் மேல் வினையெச்சவிகுதியையேற்றிக் கிடக்கிறதென்க. ஆகுலம் ஸ்ரீ வடசொல். ஆகுலஞ்செய்கையாவது – கலங்கப் பண்ணுகை, ஹிம்ஸிக்கை.

அம் குயிலே! ஸ்ரீ நான் இப்படி கஷ்டப்படாநிற்கவும் நீ மென்மலர்ப் பள்ளியிலே நிழலாடக் கண்படைகொண்டு மறைந்துகிடப்பது வெளியில் தலைகாட்டினால் நம் அழகுக்குக் குறைநேர்ந்துவிடுமென்ற கருத்தினாலன்றோ! என் கஷ்ட நிவாரணத்தை முக்கியமாகக் கொள்ளாமல் உன் அழகையே முக்கியமாகக்கொண்டு கிடக்கிறாயே! இதுவோதகவு? என்ற உபாலம்பம் தோற்ற அழகிய குயிலே! என விளிக்கின்றாள் போலும்.

சாலத்தருமம் பெறுதி ஸ்ரீ பிராட்டி, திருவடியை நோக்கி (வாசா தர்மமவாப்நுஹி) என்று அருளிச்செய்ததை ஆண்டாளும் அடியொற்றிக் கூறினளென்க. …. ….  …   …  ….  ….    ….   (எ)

English Translation

Desiring the embrace of the Lord who sleeps in the foaming Sea of Milk, my bosom rises and throbs in excitement, tormenting my soul. O Good Koel, why do you go into hiding? Go and call my Lord of discus, mace and conch, and earn my lasting gratitude.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top