(472)
தடவரைவாய் மிளிர்ந்துமின்னும் தவளநெடுங் கொடிபோல்
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும்என் சோதிநம்பீ
வடதடமும் வைகுந்தமும் மதிள்துவ ராபதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டுஎன்பால் இடவகை கொண்டனையே.
பதவுரை
| தடவரைவாய் |
– |
பெரிய பர்வதத்தில் |
| மிளிர்ந்து வின்னும் |
– |
மிகவும் விளங்கா நின்றுள்ள |
| தவனம் நெடு கொடி போல் |
– |
பரிசுத்தமான பெரியதொரு கொடிபோல, |
| சுடர் ஒளி ஆய் |
– |
மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய் |
| என் நெஞ்சின் உள்ளே |
– |
எனது ஹ்ருதயத்தினுள் |
| தோன்றும் |
– |
விளங்கா நின்றுள்ள |
| சோதி கம்பீ |
– |
ஒளியினால் நிரம்பியவனே! |
| வட தடமும் |
– |
வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும் |
| வைகுந்தமும் |
– |
ஸ்ரீவைகுண்டமும் |
| மதின் |
– |
மதில்களையுடைய |
| துவராதியும் |
– |
த்வாரகையும் (ஆகிற) |
| இடவகைகளை |
– |
இடங்களை யெல்லாம் |
| இகழ்த்திவிட்டு |
– |
உபதேஷித்துவிட்டு, |
| என்பால் |
– |
என்னிடத்தில் |
| இடவகை கொண்டனையே |
– |
வாஸ்தாக புத்தியைப் பண்ணியருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் எம்பெருமான் திருப்பாற்கடல் முதலிய திவ்ய ஸ்தாநங்களை மறந்துவிட்டுத் தம்மிடம் போந்தபடியைப் பேசியருளினார்; ஒரு பொருளை மறதியினால் விட்டவர்கள் மீண்டு ஒருநாள் அப்பொருள் நினைவுக்கு வரும்போது அதனை அங்கீகரிப்பதுபோல, எம்பெருமானும் இப்போது திருப்பாற்கடல் முதலிய விடங்களை மறந்துவிட்டானேலும், பின்பொருகால் அவை நினைவுக்குவரின், அவற்றை அங்கீகரித்தருள வானன்றோ? என்று சிலர் சங்கிப்பதாகக் கொண்டு, அச்சங்கைக்குப் பரிஹாரம் பிறக்குமாறு இப்பாட்டை, அருளிச் செய்கின்றாமென்க. ‘இடவகைகள் இகழ்ந்திட்டு’ என்றதில்நோக்கு. ஒருவன் தன் மனைவியை மறந்து மற்றொருத்தியை காதலித்தானாகில், பின்பு ஒரு காலத்தில் மனைவியை ஸ்மரித்து, அவளோடு புணரக் கருதக்கூடும். அவன்றானே அவளிடத்துச்சில குற்றங்குறை காரணமாக அவளை இகழ்ந்து விட்டானாகில், மீண்டு ஒருகாலும் அவளை நெஞ்சிலும் நினையான்; அதுபோல, எம் பெருமான், திருப்பாற்கடல், பரமபதம், ஸ்ரீத்வாரகாபுரி முதலிய இடங்களைத் தானே புத்திபூர்வமாக இகழ்ந்துவிட்டு வந்தனானாதலால், இனி அவ்விடங்களை ஒருகாலும் நினைக்கவும் மாட்டான் என்பது திருவுள்ளக் கருத்து.
பெரியதொரு மலையின் கொடுமுடியில் நிர்மலமாக விளங்குகின்ற ஒரு கொடி எல்லார்க்கும் காண எளிதாயிருக்குமாறுபோல, என்னுடைய ஹ்ருதய கமலத்தினுள்ளே ஸுஸ்பஷ்டமாகப் பளபளவென்று விளங்காநின்ற தேஜஸ் ஸ்வரூபியே! என்று எம்பெருமானை விளிக்கின்றார். முன்னடிகளில். மிளிர்ந்த மின்னும்- மீமிசைச்சொல். தவளம்- *** மென்ற வடசொல் திரிபு. இரண்டாமடியில், சுடர், ஒளி, சோதி என்ற இம்மூன்று சொற்களுக்கும், முறையே, திவ்யாத்மஸ்வரூபம், திவ்யமங்கள விக்ரஹம், திவ்யகல்யாண குணம் எனப் பொருள்வாசிகாண்க. மூன்றாமடியில், வடதடமென்பதை, வட***மென்னும் வடசொல்லின் விகாராமகக்கொண்டு, ஆலிலை என்று பொருள் கூறுவாருமுளர்; தனம் = தடம்; ***- துவராவதி- ***- இகழ்ந்திடுதல்- வெறுப்புக் கொள்ளுதல் என்பால் = பால்- எழலுருபு, இடவகை- இடம். “கொண்டனையே” என்றதற்குப்பின், இப்படியுமொரு ஸௌசீல்யமிருப்பதே! இப்படியுமொரு ஸௌலப்பமிருப்பதே! இப்படியுமொரு வாத்ஸல்யமிருப்பதே! எனக்கூட்டி உயர்யஸிக்க.
“உனக்குரிதத்தாக்கினையே” என்பாலிடவகை கொண்டனையே’ என்று- ‘இப்படி செய்தாயே! என்று அவன் திருவடிகளிலே விழுந்து கூப்பிட இவரையெடுத்து மடியிலே வைத்துத் தானும் ஆச்வஸ்தனான படியைக் கண்டு ப்ரீதராய்த் தலைக்கட்டுகிறார். “அதனிற் பெரிய வெள்ளை” என்று நம்மாழ்வாருக்குப் பகவத்விஷயத்திற் பிறந்த அபிநிவேசமெல்லாம், இப்பெரியாழ்வார் பக்கவில் ஈச்வரனுக்குப் பிறந்தபடி இத்திருமொழி” என்ற ஆற்றோருரையி லருளிச்செயல் இங்கு அறியற்பாலது.
English Translation
Like a bright spotless flag fluttering gaily on a mountain-top, my radiant Lord, you appear as a flame flickering brightly in my heart. Casting aside the northerly milk Ocean, the high Vaikunta, the walled city of Dvaraka and many such places of abode, you have chosen to live in me.
