(293)
காறை பூணும் கண்ணாடி காணும்தன் கையில் வளைகுலுக்கும்
கூறை யுடுக்கும் அயர்க்கும்தங் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறிநின்று ஆயிரம்பேர்த் தேவன் திறம்பி தற்றும்
மாறில் மாமணி வண்ணன் மேல்இவள் மாலுறு கின்றாளே.
பதவுரை
| இவள் |
– |
இப்பெண்பிள்ளையானவள் |
| காறை |
– |
பொற்காறையை |
| பூணும் |
– |
(தன் கழுத்தில்) பூணா நின்றாள்; |
|
(அக்காறையுங் கழுத்துமான அழகை) |
||
| கண்ணாடி காணும் |
– |
கண்ணாடிப் புறத்தில் காணாநின்றாள்; |
| தன் கையில் |
– |
தன் கையிலிருக்கிற |
| வளை குலுங்கும் |
– |
வளையல்களை குலுக்கா நின்றாள்; |
| கூறை |
– |
புடவையை |
| உடுக்கும் |
– |
(ஒழுங்குபட) உடுத்துக் கொள்ளாநின்றாள்; |
|
(அவன் வரவுக்கு உடலாக இவ்வளவு அலங்கரித்துக் கொண்டவளவிலும் அவ்ன் வரக்காணாமையாலே,) |
||
| அயர்க்கும் |
– |
தளர்ச்சியடையா நின்றாள்; |
|
(மறுபடியுந் தெளிந்து இதற்குமேலாக அலங்கரித்துக்கொள்ளத் தொடங்கி) |
||
| தன் கொவ்வை செம் வாய் திருத்தும் |
– |
கோவக்கனிபோலச் சிவந்துள்ள தன் அதரத்தைத் (தாம்பூல சர்வணாதிகளால்) ஒழுங்குபடுத்தா நின்றாள்; |
| தேறித்தேறி நின்று |
– |
மிகவுந் தெளிந்துநின்று |
| ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும் |
– |
ஸஹஸ்ரநாமப் பொருளான எம்பெருமானுடைய குணங்களை வாய் புலற்றாநின்றாள்; |
|
(அதன் பிறகு) |
||
| மாறு இல் |
– |
ஒப்பற்றவனும் |
| மா மணி வண்ணன் மேல் |
– |
நீலமணி போன்ற நிறத்தையுடையனுமான(அக்) கண்ணபிரான் மேல் |
| மாலுறுகின்றாள் |
– |
மோஹியா நின்றாள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானது வரவை எதிர்பார்த்திருந்த என்மகள் தன் ஆற்றாமையலே ‘ஏதேனுமொன்றைச் செய்து நாம் அவனைப் பெறவேணும்’ என்று நினைத்து; ‘அவன் மனமிழுப்புண்ணுமாறு நாம் நம்மை அலங்கரித்துக் கொண்டால் அவன் தானே வந்து மேல்விழுவன்’ என்று, முதன்முதலாக அவன் கண்டு மகிழ்ந்து கட்டிக்கொள்ளுமிடமான கழுத்தைக் கண்டிகை முதலிய பூஷணங்களால் அலங்கரித்து, இவ்வலங்காரம் அவன் உகக்கும்படி வாய்த்ததா என்பதை உணருகைக்காக அவ்வழகைக் கண்ணாடிப் புறத்திலே காண்பதும், இம்மனோரதமடியாக உடம்பில் ஒரு பூரிப்புத் தோற்றுகையால் அதன் அளவை அறிகைக்காகக் கைவளைகளை அசைத்துப் பார்ப்பதும், அவன் உகக்கத்தக்க பட்டுப்புடவையை அவ வருமளவுங் களைவதும் உடுப்பதும், இப்படி அவன் வரவுக்கு உடலாகத் தன்னை அலங்கரித்தவளவிலும் அவன் வரக்காணாமையாலே அறிவழியாநிற்பதும், மீண்டும் அறிவு குடிபுகுந்து ‘இன்னமும் அவன் விரும்பி வருகைக்கு உடலாகச் சில அலங்காரங்களைச் செய்துகொள்வோம்’ என்று தனது கொவ்வைக் கனிவாயைத் தாம்பூல சர்வணாதிகளால் மிகவுஞ் சிவக்குமாறு பரிஷ்கரிப்பதுமாயிருந்துகொண்டு, அவ்வளவிலே தனது அலங்காரவகைகள் நன்கு வாய்த்தமையையும், ஆசாலேசமுடையாரையும் விரும்பிக் கைக்கொள்ளுகையாகிற அவனுடைய சீர்மையையும் அநுஸந்தித்துத் தெளிந்துநின்று வரவை யெதிர்பார்க்க, அவ்வளவிலும் அவன் வரக்காணாமையாலே மோஹமடையாநின்றாளென்றவாறு.
English Translation
She wears a necklace, looks into the mirror, shakes her bangles, sets her Saree right, faints, then applies rough on her coral lips, stands up, steadies herself and begins to recite the thousand names of the peerless gem-hued Lord Krishna. Alas, she is infatuated!
