(292)
பேச வும்தெரி யாத பெண்மையின் பேதையேன் பேதைஇவள்
கூச மின்றிநின் றார்கள் தம்மெதிர் கோல்கழிந் தான்மூழையாய்
கேசவா வென்றும் கேடிலீ யென்றும் கிஞ்சுக வாய்மொழியாள்
வாச வார்குழல் மங்கை மீர்இவள் மாலுறு கின்றாளே.
பதவுரை
| வாசம் வார் |
– |
வாஸனையையும் நீட்சியையுமுடைய |
| குழல் |
– |
கூந்தலையுடைய |
| மங்கைமீர் |
– |
பெண்காள்! |
| பேதையேன் |
– |
பேதைமையையுடைளான என்னுடைய |
| பேதை |
– |
பெண் பிள்ளையும் |
| பெசவும் தரியாத பெண்மையின் |
– |
(தன்னுடைய ஆசாரத்துக்கு ஒரு கெடுதி விளைந்ததாகப் பிறர்) ஒரு வார்த்தை சொன்னாலும் (அதைப்) பொறுக்கமாட்டாத ஸ்த்ரீத்வத்தையுடையவளும் |
| கிஞ்சுகம் வாய் மொழியாள் |
– |
கிளியினுடைய வாய்மொழி போன்ற இனிய வாய் மொழியையுடையவளுமான |
| இவள் |
– |
இவள், |
| நின்றார்கள் தம் எதிர் |
– |
மர்யாதை தவறாமல் இருக்குமவர்கள் முன்னே, |
| கூசம் இன்றி |
– |
கூச்சமில்லாமல் |
| கோல் கழிந்தான் மூழை ஆய் |
– |
கோலைவிட்டு நீங்கின அகப்பை போல |
|
(என்னோடு உறவற்றவளாய்க்கொண்டு) |
||
| கேசவா என்றும் |
– |
கேசவனே! என்றும் |
| கேடு இலீ என்றும் |
– |
அழிவற்றவனே! [அச்யுதனே!] என்றும் வாய் விட்டுச் சொல்லி |
| இவள் மாலுறுகின்றாள் |
– |
இவள் மோஹமடையா நின்றாள்; |
| ஏ |
– |
இரக்கம், |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “பேசவுந் தெரியாத“ என்பது – அச்சுப்பிரதிகளிற் பாடம் அது – வியாக்கியானப் போக்குக்குப் பொருந்தாதென மறுக்கப்பட்டது. “ஒருவார்த்தை சொல்லப் பொறாத ஸ்த்ரீத்வத்தையுடைய, அதாவது – தன்னுடைய ஆசாரத்தால் ஸ்த்ரீத்வத்துக்கு ஒரு நழுவுதல்வாராதபடி வர்த்திக்கு மளவன்றிக்கே, நழுவுதலுண்டாக ஒருவர் ஒருவார்த்தை சொல்லிலும் அது பொறாமல் மாந்தும்படியான ஸ்த்ரீத்வத்தை யுடையவளென்கை, ஸ்த்ரீவமாவது – நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என்கிற ஆத்மகுணயோகம்“ என்றிறே மணவாளமாமுனிகள் உரைத்தருளிற்று. தெரியாத என்ற பாடத்திலும் அக்கருத்தை ஏறிட்டுரைக்க்க் கூடுமென்பர் சிலர், அது அஸாத்யமெனத்தெளிக, தரியாத என்பதே ஆன்றோர் பாடம், யரியாத என்றபடி. மற்றையடிகளின் கருத்தும் இப்பாடத்துக்கே போரப்பொருந்துமென்க.
கருத்து:- ஸ்த்ரீவத்துக்கு ஏற்ற குணங்களில் ஒன்றுக்கும் ஒரு கேடு விளையாதபடி மரியாதைமுறைமையில் தான் ஒழுங்குபட நிற்பதுந் தவிர அக்குணங்களுக்குக் கெடுதிவிளைந்ததாக ஒருவர் ஒரு பேச்சு பேசினால் அட்டைக் கேட்டு ஸஹித்திருக்கவும் மாட்டாத ஸந்நிவேசத்தில் அமைந்திருந்த எனது பெண்பிள்ளை இன்று செய்தபடியைப் பார்த்தால், முன்பு தான் நின்ற நிலைமைக்கு எதிர்த்தட்டாயிருக்கின்றது; அது ஏன்? எனில்; இன்றளவும் அடக்கத்துடன் ஒடுங்கியிருந்த இவள் இன்று காம்பை விட்டு நீங்கின அகப்பை போல் தாயாகிய என்னை அகன்று கூச்சமின்றித் தெருவில் புறப்பட்டுக் கண்ணன் பெயர்களைக் கூவியழைத்து அவன் வரவைக் காணாமல் மயக்கமுறுகின்றாள்; இது, தான் முன்புநின்ற நிலைமைக்குப் பொருந்தியவாறாமோ? என்றவாறு. கூசம்-அம் விகுதி பெற்ற தொழிற்பெயர். கோல்கழிந்தான் மூழை ஆய்-கோல் கழிந்த மூழையாய் என்றபடி; கோல்கழிந்தான் மூழை ஆய் எனப் பிரித்து, மூழை கோல்கழிந்தால் அதை ஒத்து என்றலுமொன்று. கிஞ்சுகம்-கிளி; வாசம்- வாஸநா என்ற வடசொற்சிதைவு.
ஸர்வசேஷியான எம்பெருமானது பொருளாகிய இவ்வாத்ம வஸ்துவை அவன்றானோ வந்து கைக்கொண்டுபோகிற் போமதொழிய, அவனிருப்பிடத்துக்கு நாமாகச் சென்று நிற்றல் ஸ்வரூபவிருத்தமாமெனத் துணிந்து அவ்வுறுதியுடன் ப்ரபந்நஸந்தாநமர்யாதையில் வழுவற நிற்பதுந்தவிர, “ஸ்வரூபவிருத்தமான செய்கையைச் செய்தார்” என்று பிறர் பேசிலும் மாந்தும்படியான நிலைமையில் நின்ற ஆழ்வார் க்ரமப்ராப்திபற்றாமல் பதறி பகவத் ஸந்நிதியிற் போய்ப்புகுந்து அவனது திருநாமங்களை அநுஸந்தித்துப் ப்ச்சேறினபடியை அன்பர் கூறுதல், இதற்கு உள்ளுறைபொருள்;
English Translation
O Fragrant Coiffured Ladies! My fond daughter with ill-formed feminine speech drools like a parrot. In front of everybody, shamelessly — like a ladle slipped from its handle — she cries,” O Kesava, O Faultless One”. Alas, she is infatuated.
