(684)
பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே
பதவுரை
| பிறை ஏறு சடையானும் |
– |
இளஞ் சந்திரன் ஏறியிரா நின்ற ஜடையையுடைய சிவனும் |
| பிரமனும் |
– |
ப்ரஹ்மாவும் |
| இந்திரனும் |
– |
தேவேந்திரனும் |
| முறை ஆய |
– |
தம் தமது யோக்யதைக்குத் தக்கபடி செய்கின்ற |
| பெரு வேள்வி |
– |
பெரிய பாகங்களின் பயனாக |
| குறை முடிப்பான் |
– |
(அவர்களது) குறையைத் தீர்த்து அவர்கள் கோரிக்கையைத் தலைகட்டுவிப்பனும் |
| மறை ஆனான் |
– |
வேதங்களிற் பரம்பொருளாகக் கூறப்படுபவனுமான எம்பெருமானுடைய |
| வெறி ஆர் தண்சோலை |
– |
பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளையுடைய |
|
திருவேங்கடம் மலை மேல் |
||
| நெறி ஆய் கிடக்கும் |
– |
(போகிற) வழியாய்க் கிடக்கின்ற |
| நிலை |
– |
நிலையை |
| உடையேன் ஆவேன் |
– |
உடையவனாகக் கடவேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் ” கானாறாய்ப்பாயுங் கருத்துடையேனாவேனே ” என்று பாரித்தவர் சற்று ஆராய்ந்ததில் அது தன்னிலும் ஓர் குறையுணர்ந்தார்; ஆறு எப்போதும் ப்ரலஹிக்கக் கூடியதல்ல. சில காலங்களில் வற்றிப்போம்; அப்போது திருமலை வாழ்ச்சி இழந்ததாம் என நினைத்தார். அங்ஙனமன்றி எப்போதும் ஒரு தன்மையாகத் திருவேங்கட முடையானை ஸேவிக்கவருகின்ற பாகவதர்களின் ஸ்ரீபாததூளி படும்படி வழியாய்க் கிடக்கும் நிலைமை தமக்கு வாய்க்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றார் இதில்.
குறை முடிப்பான்-இது இரட்டுற மொழிதலாய், குறையைத் தீர்ப்பவன், வேண்டுகோளைப் பூர்த்தி செய்பவன் எனப் பொருள்தரும். அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்டப்ராப்தியும் செய்பவன் என்கை.
English Translation
The Lord who is the substance of the Vedas, grants to Brahma, Siva and Indra the fruits of their sacrifices. He is the resident of Venkatam hills, where I wish to be a footpath amid the cool enchanting groves.
