(573)
செங்கமல நாண்மலர்மேல் தேனுகருமன்னம்போல்
செங்கட்க ருமேனி வாசுதே வனுடய
அங்கைத்த லமேறி அன்னவ சஞ்செய்யும்
சங்கரையா உஞ்செல்வம் சாலவ ழகியதே
பதவுரை
| நாள் |
– |
அப்போதலர்ந்த |
| செம் கமலம் மலர் மேல் |
– |
செந்தாமரைப் பூவில் (படிந்து) |
| தேன் |
– |
தேனை |
| நுகரும் |
– |
பருகுகின்ற |
| அன்னம்போல் |
– |
அன்னப்பறவை போன்று |
| செம் கண் கருமேனி வாசு தேவனுடைய |
– |
சிவந்த திருக்கண்களையும் கறுத்த திருமேனியையுமுடைய கண்ணபிரானது |
| அம் கைத்தலம் ஏறி |
– |
அழகிய கைத்தலத்தின் மீதேறி |
| அன்னவசம் செய்யும் |
– |
கண் வளர்கின்ற |
| சங்கு அரையா! |
– |
சங்குகளிற் சிறந்த பாஞ்ச ஜந்யமே! |
| உன் செல்வம் |
– |
உன்னுடைய செல்வமானது |
| சால |
– |
மிகவும் |
| அழகியது |
– |
சிறந்ததுகாண் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அப்போதலர்ந்த செந்தாமரை மலரின்மேலே அன்னம் படிந்து மதுபாநம் பண்ணுமாபோலே கண்ணபிரானுடைய அழகிய திருக்கையின்மேலேறி மதுபாநம் பண்ணி உணவுக்கீடாக உறக்கங்கொள்ளுகிற திருச்சங்கே! உன் போகத்தின் பெருமையை நான் என்னசொல்வேன் என்கிறாள். வெண்மைநிறத்தில் ஸாம்யத்தைக்கொண்டு சங்கை அன்னத்தோடு ஒப்பிட்டாள். அங்கைத்தலமானது செங்கமல நாண்மலரோடு ஒப்பிடப்பட்டது.
செங்கமலநாண்மலரில் மது உள்ளமையால் அதனை அன்னம் பருகுவதுண்டு, இங்குச் செங்கமலமலராகச் சொல்லப்பட்ட திருக்கையில் மது இல்லையே, திருவாயில்தானே மது உண்டு. “அங்கைத்தலமேலி“ என்றிருக்கையாலே இந்த உபமாநோபமேயபாவம் எங்ஙனேபொருந்தும்? என்று சிலர் சங்கிப்பர்கள், – அன்னமானது செங்கமல நாண்மலரின்மேல் இருந்துகொண்டு தேனேநுகர்வது போல் – என்று விவக்ஷிதமாகக் கொண்டால் இந்தஸிங்கைக்குப் பரிஹாரமாகும். செங்கமலநாண்மலரிமேல் அன்னத்தின் இருப்புக்கும் வாசுதேவனுடைய அங்கைத்தலத்தில் சங்கின் இருப்புக்கும் உபமாநோபமேயபாவம் விவக்ஷிதமென்க.
அன்னவசஞ்செய்தல் – உண்ட உணவுக்கீடாக இடம்வலங்கொள்ளுதல், உறங்குதல். சங்கரையா! அரையன் – அரசன், சங்குகளிற்சிறந்தது.
ஆழ்வானருளிச்செய்த, ஸுந்தரபாஹுஸ்தவத்தில் – “ஸ்ரீமத்வாந்ரிபதி பாணிதரலாப்ஜயுக்மம் ஆரூடயோர் விமலசங்கரதாங்கயோஸ்து – ஏகோப்ஜமாச்ரித இவோத்தமராஜ ஹம்ஸ், பத்மப்ரியோர்க்க இவ தத்ஸ்மிதோ த்விதீய“ என்ற ஸ்லோகத்தில் திருச்சங்கைப்பற்றி வருணித்திருப்பதில் இப்பாட்டின் கருத்து அமைக்கப்பட்டிருக்கின்றமை அறியத்தக்கது.
English Translation
O Best-among-conches! Your lot is beautiful. You are perched on the shoulders of the dark Lord of lotus-eyes, like a swan gracefully resting on a lake, after shipping nectar from day-fresh lotus flowers.
